(இ - ள்.) கோபித்தெழும் அரசராகிய பகைவர்தம்முடைய நிலைமையை உறவாக்கி மீண்ட அன்பர்தம்தேர் வந்தபடியைச் சொல்லியது எ-று. வ - று. தீர்ந்து வணங்கித் திறையளப்பத்தெம்முனையுள் ஊர்ந்துநங் கேள்வ ருழைவந்தார் - சார்ந்து பரிகோட்ட மின்றிப் பதவார்ந் துகளும் திரிகோட்ட மாவிரியத் தேர். (இ - ள்.) ஒன்னார் தம் பகையையொழிந்து பணிந்து திறைகொடுப்பப் பகைமுனையுட் செலுத்தி நம்முடைய கொழுநர்பக்கத்தே வந்தார்; ஒன்றோடொன்று கூடிச்செலவுவளைவின்றிச் செங்கோலறுகை அருந்திப் பாயும் வளைந்தகொம்பினையுடைய கலை கெட்டோடத் தேரினை எ-று. தேர் ஊர்ந்து நங்கேள்வர் உழைவந்தாரென்க. 278. நாண்முல்லை செறுநர் நாணச் சேயிழை யரிவை வறுமனை வைகித் தற்காத் தன்று. (இ - ள்.) பகைவர் நாணச் சிவந்த ஆபரணத்தினையுடையமடந்தை கணவன் பிரிந்த இல்லிலே தங்கித் தன்னைப் பரிகரித்தது. எ-று. வ - று. கொய்தார மார்பிற் கொழுநன்றணந்தபின் பெய்வளை யாட்குப் பிறிதில்லை- வெய்ய வளிமறையு மின்றி 1வழக்கொழியா வாயில் நளிமனைக்கு நற்றுணை நாண். (இ - ள்.) மட்டஞ்செய்த மாலையாற் சிறந்தமார்பினையுடைய கணவன் பிரிந்தபின்பு இட்ட தொடியினையுடையாட்கு வேறொரு காவலுமில்லை; இடக் கதவுமின்றியே யாவரும்இயங்குதலொழியாத வாயிலையுடைய பெரிய மனைக்கு நல்லதுணைமை நாணே எ-று. (4) கொய்தாரமார்பென்றவழி,அகரம்சாரியை. 279. இல்லாண் முல்லை கழுமிய காதற் கணவனைப் பழிச்சி இழுமென் சீர்த்தி யின்மலி புரைத்தன்று (இ - ள்.) பொருந்திய காதற்கணவனைவாழ்த்திப் பலரும் இசைக்கும் அனுகரணத்தினையுடையகீர்த்தியாற் சிறந்த இல்லின்மிகுதியைச் சொல்லியது எ-று. வ - று. கல்லெனீர் வேலிக் கணவன் கழல்வாழ்த்தி 2ஒல்லும் வகையால் விருந்தோம்பிச்-செல்லுந்தம் இற்செல்வ மன்றி யிரந்தவர்க் கீகல்லாப் புற்செல்வம் பூவா புகழ்.
1. மதுரைக். 356. 2. குறள், 33. |