பக்கம் எண் :

வம்ப வுரையொடு மயங்கிய
அம்பற் பெண்டிரு மறைகவெம் மலரே.

(இ - ள்.) அழகிய தொடி கழல என் அழகழிவு காட்டுவான் வேண்டிப் போதல் உடன்பட்டேன், அத்தலைவன் முன்பு; இல்லாத புதுவார்த்தையொடு கலங்கிய புறங்கூறும் பெண்டிரும் சொல்லுக, எம்முடைய அலரை எ-று.

யான் செல்ல வலித்தேனெனச் சொல்லிற்பெருந்திணையாம்.

(12)

ஆண்பாற் கூற்றுப் பெண்பாற் கூற்றுக்கைக்கிளைப் பாட்டு இருபத்தொன்றும் முடிந்தன.

பதினொன்றாவது கைக்கிளைப்படலம் முற்றிற்று.


பன்னிரண்டாவது
பெருந்திணைப்படலம்
(பெண்பாற்கூற்று)
(சூத்திரம் 16.)

வேட்கைமுந் துறுத்தல் பின்னிலை முயறல்
பிரிவிடை யாற்றல் வரவெதிர்ந் திருத்தல்
வாராமைக் கழித லிரவுத்தலைச் சேறல்
இல்லவை நகுதல் புலவியுட் புலம்பல்
5பொழுதுகண் டிரங்கல் பரத்தையை யேசல்
கண்டுகண் சிவத்தல் காதலிற் களித்தல்
கொண்டகம் புகுதல் கூட்டத்துக் குழைதல்
ஊடலு ணெகிழ்த லுரைகேட்டு நயத்தல்
பாடகச் சீறடி பணிந்தபி னிரங்கல்
10பள்ளிமிசைத் தொடர்தல் செல்கென விடுத்தலென
ஒன்பதிற் றிரட்டியோ டொன்று முளப்படப்
பெண்பாற் கூற்றுப் பெருந்திணைப் பால.

என் - னின், பெருந்திணைக்குரிய பெண்பாற்கிளவி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) வேட்கை முந்துறுத்தல் முதலாகச் செல்கென விடுத்தல் ஈறாகச் சொல்லப்பட்ட பத்தொன்பதும் பெருந்திணைக்குரிய பெண்பாற் கிளவியாம் எ-று.

அவற்றுள் :-

306. வேட்கை முந்துறுத்தல்

கையொளிர் வேலவன் கடவக் காமம்
மொய்வளைத் தோளி முந்துற மொழிந்தன்று.