361. பிடி வென்றி வ - று. குவளை நெடுந்தடங்கட் கூரெயிற்றுச்செவ்வாய் அவளொடு மாமை யொப்பான் - இவளொடு பாணியுந் தூக்கு நடையும் பெயராமைப் பேணிப் பெயர்ந்தாள் பிடி. (இ - ள்.) செங்கழுநீர்மலரை யொத்த நெடியபெரிய கண்ணினையும் கூரிய எயிற்றினையும் சிவந்த வாயினையுமுடைய சீதேவியுடன் நிறமொத்த இவளோடு தாளமும் இசையும் செலவும் தப்பாதபடி பரிகரித்துப் பிடிபோல அசைந்து பெயர்ந்து ஆடுங் கூத்தை ஆடினாள் எ-று. இனிப் பெயர்த்தாளென்றுபாடமோதிப் பிடியை நடத்தினாளென் பாருமுளர். (19) ஒழிபு முற்றும்.
ஆகப்பட்டு 361. (சூத்திரம் 19.) | வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி உட்குடை யுழிஞை நொச்சி தும்பையென் றித்திற மேழும் புறமென மொழிப வாகை பாடாண் பொதுவியற் றிணையெனப் | 5 | போகிய மூன்றும் புறப்புற மாகும். ஐயனாரிதனார் பாடிய புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் முற்றப்பெற்றன. |
|