பக்கம் எண் :

(வ - று.) கயக்கிய நோயவாய்க் கையிகந்துநம்மை
இயக்கிய யாக்கை யிறாமுன்-மயக்கிய
பட்படா வைகும் பயன்ஞால நீள்வலை
உட்படாம் போத லுறும்.

(இ - ள்.) கலக்கிய நோவுகளையுடையவாய்க்கைகடந்து நம்மை நடத்திய சரீரம் ஒடிவதற்கு முன்னேமருளப் பண்ணின குணம் அடுத்துத் தங்கும் பயத்தையுடையஉலகமாகிய நீண்ட கண்ணியுள்ளே அகப்படாமாகி நன்னெறிக்கட்சேர்தல் உறுதியுடைத்து எ-று.

பண்பு: பட்பென விகாரமாயிற்று.

(34)

வாகைத்திணைப்பாட்டு ஒன்றும், துறைப்பாட்டுமுப்பத்துமூன்றும் முடிந்தன.

எட்டாவது வாகைப்படலம்முற்றிற்று.


ஒன்பதாவது
பாடாண்படலம்
(சூத்திரம் 9)

பாடாண் பாட்டே வாயி னிலையே
கடவுள் வாழ்த்தொடு பூவை நிலையே
பரிசிற் றுறையே யியன்மொழி வாழ்த்தே
கண்படை நிலையே துயிலெடை நிலையே
5மங்கல நிலையொடு விளக்கு நிலையே
கபிலை கண்ணிய புண்ணிய நிலையே
வேள்வி நிலையொடு வெள்ளி நிலையே
நாடு வாழ்த்தொடு கிணையது நிலையே
களவழி வாழ்த்தே
10வீற்றினி திருந்த பெருமங் கலமே
குடுமி களைந்த புகழ்சாற்று நிலையே
மணமங் கலமே பொலிவுமங் கலமே
நாண்மங் கலமே பரிசி னிலையே
பரிசில் விடையே யாள்வினை வேள்வி
15பாணாற்றுப் படையே கூத்தராற்றுப் படையே
1பொருநாற்றுப் படையொடு விறலியாற்றுப் படையே
வாயுறை வாழ்த்தே செவியறி வுறூஉக்
குடைமங் கலமொடு வாண்மங் கலமே
மண்ணுமங் கலமே யோம்படை யேனைப்
20புறநிலை வாழ்த்து முளப்படத் தொகைஇ

(பி-ம்.) 1. 'பொருநராற்றுப்படை'