பன - பெருக்குவன, கோந - வேற்றரசருடைய, கரங்களே - திறைகளை, மே அளக்கர் - பொருந்திய கடலானது, வியன் திரை - பெரிய திரையோடும், வேலை சூழ் கோ - கரையோடும் சூழப்பட்ட நிலவலயத்தை, வளர்ப்பன - காப்பன, கோந - இச் சோழனுடைய, கரங்கள் - கைகள் எ - று.
கரம் - திறை. கோ - சோழன். இதில் 'கோவ ளர்ப்பன கோநக ரங்களே' என்ற சொற்றொடர், மூன்றாமடி யொழிய மற்றைய மூன்றடிகளிலும் மடங்கி வருதல் காண்க.
இவை நான்கும் மூன்றடி மடக்கு.
இனி, நான்கடி மடக்கு வருமாறு :-
நான்கடியும் மடக்கு
எ - டு : | 'வான கந்தரு மிசைய வாயின |
| வான கந்தரு மிசைய வாயின |
| வான கந்தரு மிசைய வாயின |
| வான கந்தரு மிசைய வாயின' |
இ - ள் : வானம் - மேகம், கம்தரு - கடலினிடத்திற் கொடுக்கும், இசைய ஆயின - ஓசையோடுகூடியிருந்தன, வான் - ஆகாயத்தை, அகம்தரும் - வவ்விக்கொள்ளும், மிசைய ஆயின - எழுச்சியை யுடையவாயின, வானகம் - விண்ணுலகத்தை, தரும் - ஒக்கும், இசைய ஆயின - புகழையுடையன, தரு மிசைய ஆயின - மரங்களை உச்சியிலே உடையன, வால் நகம் - பெரிய மலைகள் எ - று.
இதில் நான்கடிகளும் ஒரேவிதமாக மடங்கினமை யுணர்க. இஃது ஏகபாதமுமாம்.
(வி - ரை)ஏகபாதம் - ஒரு அடி. பாதம் - அடி; 'அந்தமில் பாதம்' (யாப் - 27) என்றவிடத்தும் இப்பொருளாதல் அறிக. ஒரே அடி. நான்கடியாக மடங்கிவரின் அது ஏகபாதமாம்.
| 'பிரம புரத்துறை பெம்மான் எம்மான் |
| பிரம புரத்துறை பெம்மான் எம்மான் |
| பிரம புரத்துறை பெம்மான் எம்மான் |
| பிரம புரத்துறை பெம்மான் எம்மான்' |
என்ற திருஞானசம்பந்தர் பாடலும் இதன்பாற்படும்.
ஒரு சொல்லானே நான்கடியும் மடக்குவதனை, இயமாஇயமகம் என்ப.
எ - டு : | 'உமாதர னுமாதர |
| னுமாதர னுமாதர |
| னுமாதர னுமாதர |
| னுமாதர னுமாதரன்' |
இ - ள் : உமா - உமையை, தரனும் - தரித்தவனும், ஆதரனும் - ஆதரிக்கின்றவனும், மா தரனும் - மானைத்தரித்தவனும், மாதரனும் - திருவைத் தரித்தவனும், ஆ தரனும் - ஆனிரையைக் காத்தவனும், மா தரனும் - யானைத் தோலைத் தரித்தவனும்,