சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

156 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

சாத்தனாகிய வினைமுதல் செய்யும் தொழிலாகிய வனைதலை உறும் குடம் செயப்படுபொருளாதல் காண்க.

இயற்றலாவது- முன்பு இல்லாத ஒன்றனை உண்டாவது.

திரித்தலாவது- வேறுபடுப்பது- முன்பு உள்ளதனை மாற்றி அமைப்பது.

எய்தப்படுவது- இயற்றவும் வேறுபடுக்கவும் படாமல் செயப்படுபொருள்
வினைமுதலது தொழிலின் பயனை உறுந் துணையாய் நிற்பது. (சேனாவரையர்உரை)
வடநூலார் வாக்கியதீயத்துள்ளும் கையடத்துள்ளும் நிர்வர்த்தியம் விகாரியம் பிராப்பியம்
என்றுகூறியவற்றையே சேனாவரையர் இங்ஙனம் மொழிபெயர்த்துக்கொண்டார்.
(பி.வி.12 உரை)
 

  ‘காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்
ஓப்பின் புகழின் பழியின் என்றா
பெறலின் இழவின் காதலின் வெகுளியின்
செறலின் உவத்தலின் கற்பின் என்றா
அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின்
நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா
ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின்
நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா
அன்ன பிறவும் அம்முதற் பொருள
என்ன கிளவியும் அதன்பால என்மனார்.’
 
தொல்.சொல்.72

என்ற தொல்காப்பிய நூற்பாவினையும் அதற்குச் சேனாவரையரும் நச்சினார்ச்சினியரும்
உரைத்த உரைகளையும் உட்கொண்டு இந்நூற்பா உரை வரையப்பட்டுள்ளது.

 இழையின்- இயற்றப்படுவது.
                    ஓப்பின், இழவின், அறுத்தலின், குறைத்தலின், தொகுத்தலின், பிரித்தலின்,
ஆக்கலின், சிதைத்தலின்,- வேறுபடுக்கப்படுவதன் வகைகள்.