சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

236 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘ஓர்உரு பிற்குஓர் பொருளே உரிமை
வேறு பொருளையும் விரும்பும் என்க.’

551

 
  ‘உரிமைமுதல் மூன்றும் ஒருங்கே தோன்ற
நிற்கும் உருபுகள் சில உள நினைக்கின்.’

60

 
  ‘தடுமாறு உருபுகள் தாம்சில உளவே.’

61

 
  ‘வேற்றுமை பலபல வாகத் தோன்றினும்
வினைமுதல் முதலாக விளம்பும்எண் பொருளின்
ஒவ்வொரு பொருளே வெவ்வே றாதலும்
ஒவ்வொரு பொருளில் பல்லுருபு வருதலும்
உருபுகள் தமக்குரிப் பொருளையும் உதவி
வேறு பொருளையும் சிலவிரும் புதலும்
எனமூன் றுள்ளே எல்லாம் அடங்கும்.’

64

 
  பிரயோக விவேக நூலார்
‘ஆதியது என்ப அபிகித கர்த்தா அநபிகிதம்
ஆதிவிட்டு ஆறொடு மூன்றும் பெறும் என்பர் ஆய்ந்துணர்ந்தோர்
ஆதியது என்ப அபிகிதம் கன்மம் அநபிகிதம்
ஆதிஐந்து ஏழுஒழித்து அல்லா தனபெறும் ஆரணங்கே’

14

 
  ‘ஆறொடும் ஐந்தொடும் மூன்றொடும் தோன்றும் அதன்கரணம்
ஆறொடும் நான்கொடும் மூன்றொடும் தோன்றும் அளித்தல் கொள்வோன்
வீறொடும் தோன்றும்ஐந் தன்றிப் பெறாதுவீடும் அவதி
ஈறொடுந் தோன்றும்கண் ணன்றிப் பெறாதுஇடம் ஏந்திழையே’

15

என்று கூறியவற்றில் ஏற்பன ஈண்டுக் கொள்க.

இனி முத்துவீரிய நூலார் தொல்காப்பியனாரை ஒட்டிக் கூறுவன வருமாறு:-