| |
| பலவிகற்பத்து ஐந்தடிப் பஃறொடை வெண்பா : |
| | `பொன்புரிந்த செஞ்சடைக்கு வெள்ளிப் புரிபுரிக்கும் வெண்டிங்கட் கண்ணியான் வெல்கொடியு மானேறே அங்கவன்ற னூர்தியுமற் றவ்வேறே யவ்வேற்றின் கண்டத்தில் கட்டும் கருமணிக்கிங் கென்கொலோ பைந்தொடியார் செய்த பகை.ழு | | | | - சி. செ. கோ. 19 | | |
| ஒருவிகற்பத்து ஆறடிப் பஃறொடை வெண்பா : |
| | `கருந்தாது கொல்லுங் கருங்கைத்திண் கொல்லர் வருந்தா தியன்றதொரு வல்விலங்கு பூண்டு திருந்தாதார் முன்றிறொறுஞ் சென்றுசிலர் தூங்க இருந்தேங் களிதூங்கி யாமேமற் றம்ம அருந்தா தலர்தில்லை யம்பலத்திற் றூங்கும் பெருந்தேன் முகந்துண்ணப் பெற்று.ழு | | | | - 20 | | |
| பலவிகற்ப ஆறடிப் பஃறொடை வெண்பா : |
| | `வில்மதனை வென்ற தலர்விழியே ; ஒன்னார்தம் பொன்னெயில் தீமடுத்த தின்னகையே ; - பூமிசையோன் தார்முடி கொய்தது கூர்உகிரே ; ஆருயிர்உண் கூற்றுயி ருண்ட தடித்தலமே ; ஏற்றான் பரசும், பினாகமும், சூலமும், என்னே? கரமலர் சேப்பக் கொளல்.ழு | | | | - 21 | | |
| ஒருவிகற்பத்து ஏழடிப் பஃறொடை வெண்பா : |
| | `வானே நிலனே கனலே மறிபுனலே ஊனேயவ் வூனி லுயிரே யுயிர்த்துணையே ஆனேறும் ஏறே அரசே அருட்கடலே தேனே யமுதே யளியோங்கள் செல்வமே யானே புலனு நலனு மிலனன்றே ஆனாலு மென்போன்மற் றார்பெற்றா ரம்பலத்துள் மாநாட கங்காணும் வாழ்வு.ழு | | | | - 22 | | |