| | மெல்ல மேவர மென்முலை ஞெமுங்கப் புல்லின் எவனோ? மெல்லியல்! நீயே, நல்காது விடுகுவை ஆயின், வைகலும் படர்மலி உள்ளமொடு மடல்மா ஏறி உறுதுயர் உலகுடன் அறியச் சிறுகுடிப் பாக்கத்துப் பெரும்பழி தருமே' | | | | - யா. வி. 65 மே. | | |
| என வரும். |
| | ஒழுகுவண்ணம் ஓசையான் ஒழுகி நடக்கும்; `ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும்' | | | | - தொ. பொ. 538 | | |
என்ப ஆகலின். வரலாறு : |
| | `அம்ம, வாழி, தோழி! காதலர்க்கு இன்னே பரிக்கும் இன்னா வாடையொடு புன்கண் மாலை அன்பின்று நலிய, உய்யலள் இவளென உணரச் சொல்லிச் செல்லுநர்ப் பெறினே, சேய அல்ல; இன்னளி இறந்த மன்னவர் பொன்அணி நெடுந்தேர் பூண்ட மாவே' | | | - யா. வி. 65 மே. | | |
| என வரும். |
| ஒரூஉவண்ணம் நீங்கின தொடையாகிக் கிடக்கும்; |
| | 'ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்' | | | | - தொ. பொ. 539 | | |
| என்ப ஆகலின். அது செந்தொடை. |
| வரலாறு : |
| | `தொடிநெகிழ்ந் தனவே; கண்பசந் தனவே; யான்சென் றுரைப்பின் மாண்பின்று ; எவனோ சொல்லாய் வாழி தோழி! வரைமிசை முள்ளால் பொதுளிய அலங்குகுலை நெடுவெதிர் பொங்கிவரல் இளமழை துவைப்ப, மணிநிலா விரியும் குன்றுகிழ வோற்கே' | | | | - யா. வி. 95 மே. | | |
| என வரும். |