செய்யுளியல் - நூற்பா எண் 14

91

 

 

`எழுவாய் எழுத்தொன்றின் மோனை, இறுதி இயைபு, இரண்டாம்
வழுவா எழுத்தொன்றின் மாதே! எதுகை, மறுதலைத்த
மொழியான் வரினும் முரண், அடிதோறும் முதல்மொழிக்கண்
அழியாது அளபெடுத்து ஒன்றுவது ஆகும் அளபெடையே.'
 
 

 - யா. கா. 16

 

 

`மாவும்புள் மோனை, இயைபின் னகை, வடியேர் எதுகைக்கு,
ஏவின்முரணும் இருள்பரந்த, ஈண்டள பாஅவளிய.'
 
 

- யா. கா. 17

 

 

`இருசீர் மிசைஇணை யாகும், பொழிப்பிடை யிட்,டொருவாம்
இருசீர் இடையிட்ட, தீறிலி கூழை, முதல்இறுவாய்
வருசீர் அயலில மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்,
வருசீர் முழுவதும் ஒன்றின்முற் றா,மென்ப மற்றவையே.'
 
 

- யா. கா. 19

 

 

`மோனை விகற்பம் அணிமலர், மொய்த்துடனாம் இயைபிற்கு,
ஏனை எதுகைக் கினம்பொன்னி னன்ன, இனி முரணிற்கு
ஆன விகற்பமும் சீறடிப் பேர, தளபெடையின்
தான விகற்பமுந் தாட்டாமரை, யென்ப தாழ்குழலே.'
 
 

- யா. கா. 20

 

 

`முன்னிரண் டாவியும் ஈறும்ஐ யும்மோனை; முன்னவற்றின்
பின்னிரண் டாவியும் ஏழும்எட் டும்மோனை; ஆறுமைந்தும்
பன்னிரண் டாமுயிர் முன்னிரண் டும்மோனை; பண்ணும்தச்சப்
பின்னிரண் டாம்நஞமவ்வும்வவ் வும்மோனை, பெண்ணணங்கே.'
 
 

- வீ. சோ. 110

 

 

`ஏன்றா முதலள வொத்திரண் டாமெழுத் தொன்றி வரின்
சான்றார் அதனை எதுகைஎன் றோதுவர்; தன்மைகுன்றா
மூன்றாவ தொன்றல் இரண்டடி ஒன்றல் முழுதுமொன்றல்
ஆன்றால் இனம்உயிர் ஆசிடை யாய்வரும் ஆங்கதுவே.'
 
 

- வீ. சோ. 111