(இ-ள்) உவமையும், உவமவுருபும், வினை பய முறுப் புருவென்ற நான்கினு ளொன்றும், உவமேயமும் என்னு நான்கும் ஒன்றற் குவமங் கூறுமிடத்துத் தொகாது விரிவன விரியுவமையா மென்றவாறு. தவலருஞ் சிறப்பிற் றாம்விரிவன வென்றதனாற் பெயரு முறையுந் தொகையுஞ் சிதையாமல் வருதல் சிறந்ததென் றுணர்க. அவையாவன :- பவளம்போலச் செவ்வா யென்புழி, பவளம் உவமையெனவும் உவமான மெனவும் படும். போலவென்பது உவமவுருபு. செம்மை யென்பது குணமாகியவேது. வாயென்றது உவமேயமெனப்படும். இப்பெயர்-பெயர், இம்முறை முறை, இத்தொகை தொகை யெனக்கொள்க. கருங்குவளைபோற்கருங்கண்கன்னல்போலின்சொற் சுருங்குதுடிபோற்சுருங்கு--மருங்குல் பிடிபோலியங்குநடைப்பெய்வளையைக்கண்டாற் குடிபோங்குடிபோங்குணம். | (152) |
இதனுள் உவமைமுதலிய நான்கும் முறையே வந்தவாறு காண்க. அன்றியும், வினை பய முறுப்புரு வென்ற நான்குவமையு மிதனகத்து வந்தவாறுங் கண்டுகொள்க. அடுக்குத் துணிவின்மேற்று. குணம் - அறிவு. குடிபோமென்றல் தன்னிலையி னீங்குமென்றல். பகுதி - பாங்கற் கூட்டம். துறை - தலைவன்வியத்தல். இலவிதழ்போற்செவ்வாயியற்றமிழ்போலின்சொல் கலகநமன்போலவடுங்கண்க--டிலகப் பிறைபோல்வளைநுதலிப்பெண்ணமிர்தைக்கண்டா லறைபோமறைபோமறிவு. | (153) |
இதுவுமது. இதனுள்ளும் நான்குவமையும் வந்தவாறுகாண்க. துறை - இதுவுமது. இதன்கண் ணடுக்குந் துணிவின்மேற்று. அறை போதல் - கீழறுத்தல். (11) | 97. | உரைத்தநான்கினுளொன்றிரண்டிடையன யாப்பினுளிடைப்பட்டெஞ்சலுந்தொகையே. |
(எ-ன்) ஏனைத் தொகையுவமையிலக்கணமுணர்-ற்று. |