வெதிரெதிர்சென்றேபொரவிண்டுகுதழலவ்வெதிரினையும் வெண்ணீறாக்கி யெதிர்பொருதற்றிறனறியாச்சந்தனத்தேம்பொதும்பரையு மெரித்தமார்க்கம் பிதிரெனவாழ்ந்திடுசிறியார்விளைத்தசினமவர்திருவின் பெற்றிதேய்த்துச் சதிருடன்வாழ்ந்திடுதலைமைத்தமர்திருவுந்தொலைத்திடுமத் தன்மைமானும். | (149) |
வீங்குபராரைக்கழைகண்முளிந்தனவாயுயிர்த்ததழன் மிறைசெய்காலை யோங்குபசுங்கழைக்குலங்கண்மழைக்குலங்கீண்டுகுபுனலா லொழித்தபான்மை தீங்குவிளைத்திடுமுதுவருறுமிடரையக்குலத்துட் சிறுவர்மன்னர் பாங்குபடைத்துளகருணைமுகத்தவராற்றணித்தருளப் பான்மைமானும். | (150) |
கருநிறப்பரூஉக்காழ்க்களங்கனிவகுளக்காமர்தீங் கனிகண்மாங்கனிகள் பெருமிதப்பலவின்கனிசுவைத்ததன்பின் பீடுலாங்காழிலாக்கனியை யொருமுகப்படவுண்சுகமுறுசுகமாங் குபயநூல்களைமுறைமுறையே குருமுகத்துணர்ந்தபின்னர்நான்மறைதேர் குறிப்பினர்சுகம்பொருவருமே | (151) |
இவை எட்டும் குருகாமான்மியத்திற் கந்தமாதனச் சுருக்கத்திற் பாட்டு. இவற்றுள் நால்வகைக்கும் புதுவதா முவமை புணர்த்தவாறு காண்க. (10) | 96. | உவமையுமுருபுமேதுவும்பொருளுந் தவலருஞ்சிறப்பிற்றாம்விரிவனவிரி. |
(எ-ன்) வைத்தமுறையானே விரியுவமைக் கிலக்கண முணர்-ற்று. |