பக்கம் எண் :

126மாறனலங்காரம்

வாசமொருசிறிதின்றாயிணரூழ்த்தசெம்மலர்தம்
      மருங்காய்நிற்பப்
பூசல்வரிவண்டினங்கணீளிடைப்போய்வாலிதாம்
      பூந்தேன்மாந்த
லாசறக்கற்றுணர்ந்தறியாரவைக்களநீத்தேசெலச்சொல்
      பவராய்நுண்ணூல்
காசறக்கற்றவர்கழகத்தடைந்துநலனுணர்பவர்தங்
      காட்சிமானும்.
(145)

உற்றவயக்களிற்றினொடும்பிடியினையாங்கொருபாந்த
      ளொருவாய்க்கொள்ளக்
கற்றதுகண்டிருதலைப்புளவற்றிருகைகவர்ந்தெடுப்பக்
      கௌவுகாலைப்
பற்குலமுக்கிடருழத்தறீவினைவந்தடியிடுநாட்
      பசையதாகப்
பெற்றபொருளினைப்பேணிமுதலுமிழந்திடருறுவோர்
      பெற்றிமானும்.
(146)

உச்சவான்மலைச்சிகரத்துறுகொடிகள்படர்பாங்க
      ருடையவாகும்
பச்சைவேய்ங்கழைத்தலையிற்சுழல்வனவாய்த்தோகைநடம்
      பயிலுநீர்மை
மொய்ச்சுலாங்குழற்கழைக்காரிகைபாசம்பூண்டகழை
      முடிமேனின்றே
விச்சைமேதகப்பவுரிகாட்டுவதாமெனக்கவினும்
      விளம்பின்மன்னோ.
(147)

காவின்மேற்படுபலவின்கனிகடுவன்கொடுசினைதாழ்
      காமர்வல்லி
மாவின்மேற்படர்ந்ததன்மேன்மந்திகடாம்வயிற்றிடையே
      மகவைத்தாங்கித்
தாவினாற்றவறுடைத்தாமெனவருவதொடுபோகுந்
      தன்மைகூத்த
ரோவில்வான்கழைக்கயிற்றின்முழவுதழீஇயெதிர்நடப்ப
      தொப்பதாமே.
(148)