பக்கம் எண் :

பொருளணியியலுரை125

பாயுங்கருங்கயல்போற்பாங்கியிவளென்றுமருங்
கேயும்படிதாவினதியற்பாத்--தோயும்
புவிநாவலர்புகழ்மால்புட்குழியாள்செவ்விக்
கவினானனத்துலவுண்கண்.
(142)

இது தொழில் பண்பு வடிவு மூன்றும்பெற் றொன்று குறைந்த வுவமை.

“அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றேயுலகு” “மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற், காதலை வாழி மதி” என்பனவும் எடுத்துக்காட்டுவமை எனவும், ஒன்றொத்த குறைவுவமை எனவும் படும்.

செய்யகமலமுகஞ்செங்கனிவாய்முத்தநகை
வெய்யகளபமுலைமின்மருங்குன்--மொய்யிழாய்
பையரவப்பாயலான்பாடகத்தான்மால்வரைவாழ்
தையலடிமாந்தளிர்.
(143)

இதுவுமது. பகுதி - சேட்படை. துறை - தலைவன்பாங்கிக் கவயவங்கூறல். வடநூலார் உலுத்தவுவமை யென்பது மிது.

முந்துநூற் புலவராற் கூறப்பட்டுத் தொன்றுதொட்டுவரு முவமை யாவன :- ‘புலிபோற்பாயுமறவன்,’ ‘மாரியன்னவண்மை,’ ‘துடிபோற் சுருங்கு மருங்குல்,’ ‘பவளம்போன்ற செவ்வாய்,’ ‘குறைபடுமதியந்தே யக்குறுமுயறேய்வதேபோல்,’ ‘நஞ்சுமமிர்தமுமேபோல் குணத்த,’ ‘கரு மணியம்பாலகத்துப்பதித்தன்ன,’ ‘பொருகயற்கண்’ என்பன முதலியன.

அதன்பின்ன ராகுங்காலங்கடோறும் புலவராற் புதுவதுபுதுவதாகப் புணர்த்தவற்றுட் சில வருமாறு :-

கோழரையகாஞ்சிரைதாம்பழுத்தருகேநிற்பவற்றிற்
      குறுகாதாங்குக்
காழிலவாங்கொழுங்கதலிக்கனிகளைச்சேட்சென்றருந்துங்
      கவிகண்மார்க்க
மூழிலவாய்ப்படைத்தபொருள்பிறர்க்குதவாவுதலுத்தரைநீத்
      துசிதமான
வாழ்வுடையோர்பொன்மனைச்சென்றமிர்தருந்திப்பசிதணிவார்
      மார்க்கமானும்.
(144)