பக்கம் எண் :

பாயிரவுரை33

பணிதன் முதலியன செய்து முபாயமாகக் கல்விகோடற்கு வருவார்க்கும், கல்வியாற் பூரணமிலராயும் அறிவிலாதாராற் சிறப்பெய்தினோர் பிற சான்றோருழை யுடையார்முன் னில்லார்போலேக் கற்றும் வெளிப்பட வந்துநின்று கல்லாது மாண்பிறந்தமானத்தாற் பிறரை யவரிடத்துக் கரந்துவிட்டவரேவலால் வருவார்க்கும் சான்றோர் நூற்பொருள் வழங்காரென்றவாறு. வழங்குதல் வித்தைகொடுத்தல். நூல்-ஆகுபெயர். அவை இலக்கண விலக்கியம்

(52)

இனிக் களங்கடியப்படுவார் பலர். அவ ரிவரெனல்,

53. ஆசாரமில்லாரழுக்காறுள்ளார்நகுவார்
கூசாதுமற்றொன்றுகூறுவார்--தேசிகன்சொற்
கற்றொன்றுறாதார்கழகத்துறிலிருந்தா
ரெற்றென்றுரையாதிரார்.

என்பதனா லுணர்க. எற்றென்பது கையாற்புடைத்தலுங் காலாலுதைத்தலுமாம்.

(53)

இனிக் கோடன்மரபு வருமாறு :-

54. கொள்வோன்கொள்கடன்கூறுங்காலைக்
கடையாமத்திடையெழுந்துளகடன்கழித்
தாரியன்மாளிகைவாயில்சென்றெய்திக்
காலமுமிடனுங்கருதுபுநின்றாங்
கெவணெவணோக்கினனவணுளனாகி
வணக்கமுமொடுக்கமும்வாய்ந்தயனிற்ப
வருகவென்றழைத்தலுமருகுசென்றிறைஞ்சலு
மருத்தியினிருத்தியென்றறைதலுமிருந்தாங்
குரையெனவுரைத்துரைத்துரனுறத்தோய்தரப்
பொழிப்பேயகலநுட்பமெச்சமெனப்
பழிப்பின்றாமுரைபகர்தலுந்தெற்றென
வுணர்ந்தபின்பொழிகெனவொழிதலுமவன்றிறத்
தோவாதுதவுவதொல்லும்வகையா
னேவாதியற்றியவின்பமெய்தியபின்
பகலினுமிரவினும்பயின்றுபின்முன்ன