பக்கம் எண் :

34பாயிரவுரை

ரகலானாகியவன்பினனாதலுந்
துயில்வுழித்தைவருந்துணைத்தாளினைத்துறந்
தொல்லையிற்றுயின்றேழுந்தொழுகுதலன்றே.

இவற்றானுணர்க. இதற்குரை வேண்டுவதில்லை. “எத்திறனாசானுவக்கு மத்திற, மறத்திற்றிரியாப்படர்ச்சிவழிபாடே” என்பதுங்கூட்டி யுணர்க.

(54)

55. கேட்டவைகேட்டவைநிரந்தரம்பாடம்
போற்றலினேட்டிற்றானேபொறித்தலு
முரைநுழைந்துணர்ந்தவொண்பொருளையுள்ளுறுத்தலு
மயலற்றொருபுடைபயின்மாணாக்கரி
னையமெய்தியதையமகற்றலு
மெய்யுணர்வினிலுறப்பிறர்க்கவைவிளம்பலு
மெய்தியதிழவாததற்கிலக்கணமே.

(எ-ன்) கற்றகல்வி யிழவாததற் குபாயமுணர்-ற்று.

இதன்பொருள் வெளிப்படை. இதனுள் உரைநுழைதலென்பது உரைமுகத்து நுண்ணிதா யாசிரியன்காட்டக்கண்ட அரும்பதங்களை மனத்தான் மறவாது தரித்தல். இவ்வாறுகோடலால் மாணாக்கன் முற்ற வுணர்ந்தானாமாறு. “ஆசானுரைத்ததமைவரக்கொளினுங் காற்கூறல்லது பற்றிலனாகும்,” “அவ்வினையாளரொடுபயில்வகையொருகால்-செவ்விதினுரைப்பவவ்விருகாலு-மையறுபுலமை மாண்புநனி யுடைத்தே” என்னுஞ் சூத்திரங்களானு முணர்க.

(55)

56. தோய்ந்தவையன்றியுந்தோயாதவற்றை
யாய்ந்தெழுகாலத்ததன்பயனெனலாய்
விழுமியதிறத்தினுள்விழுமியதொன்றாஞ்
சொல்லொடுசொல்லினைத்தொடுத்தலுந்தொலையாக்
கல்வியிற்பயிறலுங்கடனாகும்மே.

(எ-ன்) முன்னர் நூனுவல்வோனாகிய வாசிரியன் வாடாக்கற்பக மணமலிபொற்பூப்போல வாய்ந்தமைவுடைய கல்வியுங் கவியுமுடைய