அருமறையாய்நள்ளிரவிற்கொடுபோகிவசுதேவராயர்பாடித் திருநகரத்திடைகரப்பவளர்ந்தவனும்வெண்ணெயினைத்திருடிமேனாட் பொருவறுகைத்தாமரையாற்செங்கனிவாய்வைத்தவனும்போதனேற னிருவருங்காண்பதற்கரிதாமந்தாமந்ததிபாண்டற்கெளிதினன்பால், | (24) |
கொடுத்தவனுமானிரைகாத்தருள்காலைக் கன்மாரிகுடைகுன்றாகத் தடுத்தவனுநான்முகத்தோன்கொடுபோய பல்லுருவின்றன்மையாக மெடுத்தவனுந்தேவகியீன்றருள்புதல்வன் றுரோவதியாமின்பக்கொம்பன் றுடுத்ததுகிலிருஞ்சபையுட்டொலையாமை யளித்தவனுமுண்மைகூறின், | (25) |
காண்டகுபொன்முடியுதைத்துக்கஞ்சனைக்கொன் றுறவோர்முன்கடுஞ்சொற்கூறப் பூண்டதொழிற்சிசுபாலன்பொன்முடிசக் கரத்தறுத்துப்புவனம்போற்றப் பாண்டவற்குத்தூதாகிநூற்றுவர்மு னுருணெடுந்தேர்ப்பாகனாகி யாண்டகைமைத்தருமன்முதலவர்க்கவனி யனைத்துமளித்தவனுமன்னோ. | (26) |
இவைமூன்றும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றின சாந்தானிக மத்தியகுளகம். துறை - கடவுள்வாழ்த்து. தெள்ளுநான்மறைப்பனுவலுமயனையாதியரும் வெள்ளிவெண்மதிக்கடவுளுங்கதிருமீன்கணமுந் தள்ளரும்பொறைமன்னுயிர்க்கணங்களுந்தழங்கு கொள்ளைவெண்டிரைப்புணரிமொண்டெழநிலைகுலையா, | (27) |
வாக்கும்பாதமும்பாணியுங்கரணமுமற்று நீக்கமுற்றமன்னுயிர்கடாமாயையுண்ணெடுங்கற் றாக்குமாடகத்துகண்மெழுகடைந்தபோற்றயங்கக் காக்கும்வாய்மையீங்கெனதெனத்திருவருள்கலந்தே, | (28) |
காலம்யாவையுங்கழிந்தபின்கழிந்தபேருருவின் ஞாலமுற்றவுண்டுறுபுனனடுவணநயந்தோ ராலநுண்டளிரெனுமனந்தனிலுலகனைத்தும் பாலனாகியுள்ளடக்குபுதுயின்றனன்பரிப்பான். | (29) |
|