இவைமூன்றும் வினைப்பெயர்கொண்டு முற்றின சாந்தானிகாந்திய குளகம். திணை - பாடாண். துறை - கண்படைநிலை. (குருகாமான்மியம். ) பரத்துவமுதலாப்பஞ்சவுற்பனனாம் பரமனெமமிறைவனாமெனல்போல் வரத்தொடும்புகழும்பஞ்சமாத்தொழிலும் வழங்கலுமிவன்றிறத்தெனல்போற் றிரத்தவாம்பஞ்சபூதமுஞ்செனித்த செய்கையுமிவன்றிறத்தெனல்போற் கரத்தினிற்பஞ்சாயுதங்களேதரித்த கருணையங்கடவுளாமெனல்போல், | (30) |
ஞானமுமழகும்வீரமுந்திருவுநவையிலானந்தமுமெமவே யானவேனையவாமுலகமென்பவற்றிற்கவையமைதியவலவெனல்போல் வானுறநிவந்தவெழுநிலத்தமைந்தமாடசூளிகையின்யாப்புறுத்தைம் பானிறந்தழீஇயதுகிற்கொடிநுடங்குபாங்கரின்வயங்குமெம்மறுகும், | (31) |
செம்மையின்யாணர்த்திவ்வியமணியாற் செழும்பொனாற்றிசைதிசையெறிக்கும் பொம்மலுநிவப்பும்வியலுநீளிடையும் பொருந்தலினொருமறுகிடைப்புக் கிம்மறுகெவனிங்கிவற்றுளிம்மாட மெம்மணிமாடமென்றியாருந் தம்வயிற்செறிந்தோரிமைப்பருநாட்டந் தாங்கியுமறிவருந்தகைய. | (32) |
இவைமூன்றும் பண்பிடனாகத்தோன்றினவுடைமைவினைக்குறிப்புக் கொண்டுமுற்றின சாந்தானிகாந்தியகுளகம். சாந்தானிககுளகமென்பது மூன்றுபாட்டு வினைமுதலியவற்று ளொன்றுகொண்டு முற்றுவது. திணை - இதுவுமது. துறை - பரமபதவருணனை. இவையுள குருகாமான்மியம். ஒழிந்தனவும் வந்தவழிக்கண்டுகொள்க. சாந்தானிககுளகம் முற்றும். ஆதிப்பரப்பிரமநாராயணனென்றுஞ் சோதிச்சுடர்மயமாந்தோற்றஞ்சா--னீதிச் சொருபமுடனுருவந்தோய்ந்துளன்காணென்று மொருபரந்தாமத்தானென்றும், | (33) |
|