பக்கம் எண் :

68மாறனலங்காரம்

பாங்குடையமன்னுயிரொன்றல்லபலவென்று
மாங்கவற்றுணீங்காதவனென்று--மோங்கவற்றை
நித்தியமாமென்றுமுடனித்தியமன்றென்றுமதை
யுய்த்ததுபூதாகியதென்றும்,
(34)

முத்திக்கவனேமுதற்காரணனென்றும்
பத்திவிடாதேபயிலென்றுஞ்--சத்தியமாய்ச்
செல்வத்திருப்பதிவாழ்சீநிவாதன்பகர்ந்த
சொல்வித்தகமேதுணிந்து,
(35)

நாமானிடப்பிறவிநன்றென்றுந்தேர்ந்தனமாற்
காமாதிகளாங்களைகளைந்து--பாமாலை
சாத்தியேநெஞ்சேதருமெமக்குமுத்தியென
வேத்தியேயின்புற்றிரு.
(36)

இவைநான்கும் வினைகொண்டுமுற்றின காபாலிகாந்தியகுளகம். திணை - பாடாண். துறை - குரவனைவாழ்த்தல்.

இச்சிப்போனிட்டவிணையடிப்போதன்றொருவ
னுச்சிப்போதானதுலகறிந்த--நிச்சயமே
யாய்ந்தாலொருவன்சிரத்தணிந்ததன்றொருவன்
பூந்தாள்கழுவும்புனல்,
(37)

இளிவந்ததுசெய்திரந்தானொருவன்
வெளிவந்தொருவனதைமீட்டான்--களிவந்த
சித்தமுறத்தன்பெயரேகேளாச்செவியனுக்கு
முத்தியளித்தானோர்முதல்,
(38)

சேதிப்பதாமொருவன்செய்தொழிலுமேனையவற்
காதிப்புவனமவைகாவல்--கோதற்ற
நற்குணத்தெம்பூமகள்கோனாரணனந்தாமத்தான்
முற்குணத்தானேயெம்முதல்,
(39)

என்றாய்ந்துணர்ந்துணர்த்தியிங்கெமையீடேற்றினான்
பொன்றாதசெஞ்சொற்புலவீர்கா--ளொன்றாய
தேவின்புறத்தமிழ்செய்தென்குருகூரன்மனம்போல்
வாவுஞ்சிறையோதிமன்.
(40)