உ கணபதி துணை பாசவதைப் பரணி | காப்பு வெண்பா | | 1. | தேசுவளர் பொம்மைச் சிவஞான தேசிகன்மேற் பாச வதைப்பரணி பன்னுதற்கு - நேசமிகும் அம்பவளச் செஞ்சடிலத் தைந்துகரத் தெந்தையருட் கம்பவளத் தும்பிமுகன் காப்பு. | | | 1. கடவுள் வாழ்த்து நிட்கள சிவம் தாழிசை | | 2. | திருமருவு மருமன்முத லெவருந் தோன்றத் திருவிளையாட் டொருதனியே செய்து மாற்றிப் பொருண்மருவு மருமறையு மறையொ ணாத பூரணதற் பதப்பொருளைப் போற்றல் செய்வாம். | (1) | | | | 3. | மயல்புரியும் பெரும்பிறவிப் பௌவம் வற்ற வற்றாத பேரின்ப வாரி பொங்கச் செயல்புரியுஞ் சிவஞான தேசி கன்பூஞ் சேவடிசூட் டும்பனுவல் சிறக்க வென்றே. | (2) |
குறிப்புரை 1. பொம்மை - பொம்மையபாளையம் ; இவ்வூர் விழுப்புரம் தாலூகாவில் உள்ளது. பன்னுதற்கு - ஆராய்ந்து சொல்லுதற்கு. கம்பம் - கட்டுத்தறி. பி - ம். ‘தேசிகர்மேல்’ ‘2. மருமன் - மார்பை உடையவன். 3. பனுவல் - நூல். |