பக்கம் எண் :

2பாசவதைப் பரணி

 

சகள சிவம்

வேறு

 
4.

நீரேந்து சடாடவியு நெருப்பேந்து கராம்புயமும்
      நெற்றிக் கண்ணும்
காரேந்து கந்தரமு முடையபிரா னடிக்கமலம்
      கருத்துள் வைப்பாம்.

(3)
 

 

 

5.

காரேந்து கந்தரமு நுதல்விழியும் புனற்சடையும்
      கனலு மேந்தாச்
சீரேந்து சிவஞான தேசிகன்செந் தமிழ்மாலை
      சிறக்க வென்றே.

(4)
 

திருமால்

 

6.

புவியனைத்துந் தனித்துண்டு போயுறங்கும் படியுறங்கிப்
      புரியும் யாக
அவியனைத்து மமரருண வருளுதவு மொருமுதலுக்
      கன்பு செய்வாம்.

(5)
   

7.

சகமனைத்துந் தனித்துண்டு தகையுறங்கும் படியுறங்கித்
      தற்சொ ரூபச்
சுகமனைத்து நுகரவருள் சிவஞான தேசிகன்சீர்
      சொல்ல வென்றே.

(6)
 

பிரமதேவர்

 

8.

இருவினையு முக்குணமு நாற்கதியு மைம்புலனும்
      இயற்றா நின்ற
ஒருவினையு முகநான்கு முடையவனை முப்போதும்
      உளத்துள் வைப்பாம்.

(7)
   

9.

புலமைந்துங் கதிநான்குங் குணமூன்றும் வினையிரண்டும்
      போக வாண்டு
நிலமைந்துந் தொழவந்த சிவஞான தேசிகன்சீர்
      நிலவ வென்றே.

(8)

4. கந்தரம் - கழுத்து.

பி - ம். ‘கராம்புசமும்’

6. புவியனைத்தும் தனித்துண்டு : “உலகந் தனித்துண்டவன் றொழுந் தாளோன்” (திருச்சிற். 132. ) யாகம் திருமால் வடிவென்பர் ; “எச்சனாந் துளவினானை” காஞ்சிப். தக்கீசப்.

9. நிலம் ஐந்து - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து திணைகள்.