பக்கம் எண் :

1. கடவுள் வாழ்த்து3

 

விநாயகர்

 
10.

நால்வாயு மைங்கரமு மிருசெவியு முக்கண்ணும்
      நயந்து தூய
பால்வாயு மெய்ஞ்ஞான போதனைகூர் மதகளிற்றைப்
      பணிதல் செய்வாம்.

(9)
 

 

 

11.

நான்மறையு மஞ்செழுத்து மிருபயனு மூவுலகும்
      நயப்ப மாயை
தான்மறையும் படியுதித்த சிவஞான தேசிகன்சீர்
      தழைக வென்றே.

(10)
 

முருகக் கடவுள்

 

12.

அயிலேறு கராம்புயமு மருளேறு முகாம்புயமும்
      ஆடல் சான்ற
மயிலேறு பதாம்புயமு மருவுமொரு முருகனையாம்
      வணங்கல் செய்வாம்.

(11)
   

13.

விண்ணேறு நெடும்புகழும் புவியேறு தண்ணளியும்
      மேவி யுள்ள
எண்ணேறு சிவஞான தேசிகன்பா மாலையரங்
      கேற வென்றே.

(12)
 

சூரியன்

 

14.

புவிபரந்த புறவிருள்கள் புறந்தந்து போயிரியப்
      புணரி வந்து
சவிபரந்த விரவிதனைப் பரவியன்பு விரவிமுன்பு
      தாழ்தல் செய்வாம்.

(13)
 

வேறு

 

15.

நனிபரந்த வகவிருள்கள் புறந்தந்து போயிரிய
      ஞாலத் தெய்தித்
தனிபரந்த சிவஞான தேசிகன்செந் தமிழ்மாலை
      தழைக வென்றே.

(14)
 

வேறு

 

16.

செயலைச் சிவஞான போதனைச் செயலுட் படவோதி யேர்தரு
மயிலைச் சிவஞான தேசிகன் வளர்மெய்ப் புகழ்வாழி வாழியே.

(15)
   

17.

கயிலைப் பதிவாழி வாழியே கனகச் சபைவாழி வாழியே
மயிலைப் பதிவாழி வாழியே வளர்கச் சியும்வாழி வாழியே.

(16)

10. பால் வாயும் - பகுதி பொருந்திய.

12. ஆடல் - ஆடுதல்.

பி - ம். ‘கராம்புசமும்’ ‘முகாம்புசமும்’ ‘பதாம்புசமும்’

14. சவி - அழகு, ஒளி.

16. செயலைச் செயலுட்பட ஓதி. மயிலை - மயிலம் ; இது மயிலாசலமெனவும் வழங்கும்.