2. கடை திறப்பு 18. | அருவின ராகியு மலரா மருவுரு வாகியு மலராம் உருவின ராகியு மலரா மொருவரை நாடியர் திறமின். | (1) | | வேறு | | 19. | அலையு மீனமு மானமு மின்றியே அன்றி யோடுநா வாய்க்குமெட் டாததாய் நிலையுந் தாழ்வு மிலாததோ ரானந்த நீள்க டற்றுறை யாடியர் திறமினோ. | (2) | | | | 20. | அங்க நாடியர் நீடிய வெழுபிறப் பாழி யேழ்கடந் தப்புறஞ் சென்மறை வங்க நாடியர் பீடிய லுளமெலா மகத நாடியர் வருகடை திறமினோ. | (3) | | | | 21. | அல்ல நாடிய ரறுபகை வளர்ப்பவர் ஆக லாலிக லப்பகை யாவையும் கொல்ல நாடியர் பேரருட் சிந்துநற் கோல நாடியர் குளிர்கடை திறமினோ. | (4) |
18. அருவினர் ஆகியும் அலராம். பி - ம். ‘அருவனர்’ 19. அலையும் ஈனமும் மானமும் ; அலைகளும் மீனமும் (மீன்களும்) அளவும் என்பது மற்றொரு பொருள். நாவாய்க்கும் - நாவையுடைய வாய்க்கும், கப்பலுக்கும். “அலை தீர்வதொர் துறைநாடியர் திறமின்” அஞ்ஞவதைப் பரணி. 20. அங்க நாடியர் - சரீரத்தை ஆராய்பவர்கள். மறை - மந்திரம். அகதம் நாடியர் - அழிவற்றதை நாடுபவர்கள். கடை - வாயில். இதில் அங்க நாடு வங்க நாடு மகத நாடு என்னும் நாட்டின் பெயர்கள் தொனிக்கின்றன. பி - ம். ‘ஏழ்கடலப்புறம்’ ‘உளமெலோமகத’ 21. அல்லாதவற்றை நாடுபவர்கள் ஆறு பகைகளை வளர்ப்பவர்களே. ஆறு பகைகள் காமம் முதலியன. இகல் - முரணுகின்ற. சிந்து - கடல். பேரருட் சிந்துவென்றது குருவை. இதில் கொல்லம், சிந்து என்னும் நாடுகளின் பெயர்கள் தொனிக்கின்றன. |