பக்கம் எண் :

2. கடை திறப்பு 5

 

வேறு

 
22.

கடல்கெழுநஞ் சோனக நாடியர்
      கடியபுலந் தாழ்பொறி யாயின
அடல்கெழுநஞ் சாவக நாடியர்
      அருள்பெறவந் தேகடை திறமினோ.

(5)
 

வேறு

 

23.

திருமணநா டியர்பிறவிச் சிறையினரா கலினமலத்
தருமணநா டியர்விழைவுற் றணிவளருங் கடைதிறமின்.

(6)
   

24.

பன்னடநா டியர்சனனப் பாவையரா வருண்மன்றிற்
கன்னடநா டியர்குறுகிக் கருணையொடுங் கடைதிறமின்.

(7)
 

வேறு

 

25.

இருளு மின்றிய வொளியு மின்றிய
      இலது மின்றிய வுளது மின்றிய
மருளு மின்றிய தெருளு மின்றிய
      வரமொ டொன்றியர் திறமினோ.

(8)
 

வேறு

 

26.

மண்ணின்மறை யாதுநிறை வாரியமி ழாது
      வாடியெரி யாதெரியின் வாதமறை யாது
விண்ணின்மறை யாதுமன மாதிபொறி மேவா
      மேலதனை மேவியணை வீர்கடைக டிறமின்.

(9)

22. நஞ்சோன் - நஞ்சைக் கண்டத்தில் உடைய சிவபெருமானை. அகம் நாடியர் - உள்ளத்தில் நாடுபவர்கள். கடிய - வன்மையையுடைய. புலம்தாழ் - புலன்களிற் சென்று தங்கும். பொறியாயின நஞ்சா அகம் நாடியர் - பொறிகளை விஷமாக நெஞ்சில் எண்ணுபவர்கள்.

சோனக நாடியர், சாவக நாடியர் என்பன தொனி.

23. அமலத்து அருமணம் ; அருமணநாடு என்பது தொனி ; நன்னூல், சூ. 272, மயிலை.

24. பல் நடம் நாடியர் - பலவகை நடனங்களை நாடுவார். சனனப் பாவையரா - சனனமாகிய கூத்தில் ஆடும் பாவையராக இருப்ப. கல் - கற்கும். நடம் - தாண்டவத்தை. கன்னட நாடு என்பது தொனி.

பி - ம். ‘பாவையராலருள்’

25. இன்றிய - இல்லாத ; நல்லூர்ப்புராணம், நைமிசப். 48, அக்கினி. 57. வரம் - மேன்மை.

பி - ம். ‘இருளுமன்றிய’

26. எரியின் எரியாது. அறையாது - வீசி அடியாது. “புனலி னமி ழாது ககன மிசை யூதை புகுத வசையாத பொருளதாய், அனலி னெரியாது படையி னழியாத வறிவை யறிவார்க டிறமினோ” அஞ்ஞவதைப்.