| வேறு | | 27. | பூண்ட பணிகள் புறத்தவிழப் புளக மெறிய விளகியுளம் நீண்ட விழிக ணீர்ததும்ப நேயத் தமர்வீர் திறமினோ. | (10) | | | | 28. | தரித்த கலையி னிலைகுலையத் தம்மை மறந்து தலைவரொடு தெரித்த கலவி நலனுகர்வீர் செம்பொற் கபாடந் திறமினோ. | (11) | | | | 29. | தாளை யெண்ணித் தலைவரொடு சாரா தகன்று தணந்தநெடு நாளை யெண்ணி யிரங்கிடுவீர் நன்பொற் கபாடந் திறமினோ. | (12) | | | | 30. | வென்றே புலனோ ரைந்தினையும் விருப்பும் வெறுப்பு மேவலராய் ஒன்றே குறித்து விழித்துறங்கும் உபாயந் தெரிவீர் திறமினோ. | (13) | | வேறு | | 31. | உலகம்விழித் ததினுறங்கி யுலகுறங்கு மதினொன்றி இலகவிழித் துறங்கிடுவீ ரிடுகதவந் திறமினோ. | (14) | | வேறு | | 32. | ஊன நாட்டம் பெற்றுடைய உலோகா தீத மொன்றேகாண் | |
27. பணிகள் - தொழில்கள், ஆபரணங்கள். 28. கலை - வித்தியாதத்துவம் ஏழனுள் ஒன்று. ஆடை ; “கலைகளை விட்டெறிவீர்” (அஞ்ஞவதைப்) ; “மெய்தழுவ வுங்கணிலை யுங்கலையும் வீழ்வுற விரும்பி யிறைமுன், கைதொழுது நும்மையு மிழந்துவிடு வீர்கடை திறந்திடுமினோ” மோகவதைப்பரணி. இந்தத் தாழிசை ஒரு பிரதியில் இல்லை. 29. தாள் - பதம், முயற்சி. “முன் பிழந்த நாளை நினைந்து போத விரங்கு வீர்கடை திறமினோ” அஞ்ஞவதைப். 30. விழித்துறங்கும் உபாயந்தெரிவீர் : “விழித்தே யுறங்கும் விளங்கி ழையீர்” (அஞ்ஞவதைப். ) ; “விழித்த கண்குரு டாத்திரி வீரரும் பலரால்” திருவிளை. 55 : 38. 31. மேல்தாழிசையின் கருத்தை விளக்கியவாறு. 32. ஊனக்கண்ணையுடைய உலகத்திற்கு அதீதமாகிய ஒருபொருளையே காணும். |