பக்கம் எண் :

2. கடை திறப்பு 7

 

ஞான நாட்டம் பெற்றுடையீர்
      நகுபொற் கபாடந் திறமினோ.

(15)
 

 

 

33.

ஐயங் கழிய மெய்யருளும்
      ஐய னடியிற் செய்யன்பின்
மையங் கழிய நீர் ததும்ப
      மலர்ந்த விழியீர் திறமினோ.

(16)
 

வேறு

 

34.

உடலு முறுபொருளு முயிரு முமதுபுகல்
      உணர்மி னுணர்மினென வுருகவேழ்
கடலு மலையுமென நிலவு சுகசலதி
      கனிவி னருளுமவர் திறமினோ.

(17)
   

35.

வளரும் விழைவுயர மனதி னிலைதொலைய
      வனச விழியினுயிர் பருகியே
தளரு மளவினிலொ ரமுத மொழியுதவு
      தகைமை பெருகுமவர் திறமினோ.

(18)
   

36.

கொடிய பிறவிநிலை குலைய வுலகின்வரு
      குருசி லருளுததி குறுகியே
நெடிய விழியருவி சொரிய நிரதிசய
      நிமல மணையுமவர் திறமினோ.

(19)
 

வேறு

 

37.

இப்பொருண் மெய்ப்பொருளே யென்று குறித்துலகோர்
      எழுபிற விச்சுழலா திவையல தாயொளிரும்
அப்பொருண் மெய்ப்பொருளே யறிமி னெனப்பகரும்
      அருள்வள ருந்தகையீ ரணிகத வந்திறமின்.

(20)

33. மை அங்கு அழிய ; மை - காம முதலிய குற்றங்கள் ; கண் மை யென்பது வேறு பொருள் ; “ஐய மொன்றுமற வாத கோனடியி னன்பொடொன்றியக மின்புற, மையழிந்திட மலர்ந்தி லங்குவிழி மல்கு வீர்கள்கடை திறமினோ” அஞ்ஞவதைப்.

34. சுக சலதி - இன்பக் கடல்.

35. விழியின் உயிர்பருகுதல் : “அளவு கண்டிட வரிய பங்கய நயனம் வந்தும தாவியைக், களவு கொண்டிட வுருகு கின்றவர் கனக நன்கடை திறமினோ” (அஞ்ஞவதைப்) ; “கண்ணாலுயி ருண்பீர்கடை திறமின்கடை திறமின்” மோகவதைப்.

36. விழியருவி : “கருகு கலியின்வலி தொலைய வுலகின்வரு கருணை மலையினருள் பரவியே, பெருகு மதிசயமொ டுருகி யருவிசொரி பெரிய விழி யினவர் திறமினோ” அஞ்ஞவதைப்.

பி - ம். ‘நிமல மளையும்’