38. | பிறப்பு மிறப்புமறப் பேதைமை விட்டகலப் பேச வொணாநிலைமைப் பெற்றியி னுற்றதிலே மறப்பு நினைப்புமற வல்வினை யோலமிட மருவி விடாதுறைவீர் வளர்கத வந்திறமின். | (21) |
| வேறு | |
39. | இறையி னிலையிஃ தெமது நிலையிஃ திருளு மலமுத லுறுபிணிக் கறையி னிலையிஃ தெனவு மறிவுறு கலைவ லவர்கடை திறமினோ. | (22) |
| | |
40. | உலகி னினைவற வமரர் பெறலற உருவ மதுகொடு மருவியே அலகி னவமதை யறிய வுரைசெய அவச முறுமவர் திறமினோ. | (23) |
| | |
41. | கரும மறுமுறை குறுகு மிறைகழல் கருது தொறும்விழி யுகுபுனல் மரும முறவுடல் புளக மெழநிலை வழுவி விழுமவர் திறமினோ. | (24) |
| | |
42. | உலகி னிலைமையு மளவில் சமயமும் உலைவில் வினைகளு முணரவவ் வலகி னிலைமையு மொழிய மொழியுமொர் அமுத மயில்பவர் திறமினோ. | (25) |
| வேறு | |
43. | மனநினை வறுமிட நினையவும் வருமிரு வினைவலி மடியவும் தனைநினை வறவது தழுவவும் தலையளி பெறுமவர் திறமினோ. | (26) |
| | |
44. | நிகரறு மிறையுரு வதுகொடு நிலமிசை யுறுமுறை நினைதொறும் புகரறு மருணெறி பகர்தொறும் புளகித மெறிபவர் திறமினோ. | (27) |
39. கலை - நூல்.
41. மருமம் - மார்பு. புளகம் - மயிர் சிலிர்த்தல். “வளைதரு வினைகழல் வுறவரு ளிறையடி மருவுதொ றுளனுடல் புளகம தெறியவும் மலர்தரு குவளைக ளருவிகள் சொரியவும்” அஞ்ஞவதைப்.
43. மனம் நினைவறும் இடம் நினைதல் : “மனனு நினைவரு மிடமது நினையவும்” அஞ்ஞவதைப்.