பக்கம் எண் :

2. கடை திறப்பு 9

45.

அத்திர விறையுரு வதுபரித்
      தவனியில் வகுமொரு பவனிபோய்ச்
சித்திர நிலைமையி லும்மையும்
      தெருவினி லுய்த்தவர் திறமினோ.

(28)
 

வேறு

 

46.

இம்மை யேகருதி வெம்மை யேபுரியும்
      எம்ம னோருமரு ளெய்தவே
செம்மை யேயருளி யெம்மை யாளிறைவர்
      செல்வ மேவுமவர் திறமினோ.

(29)
   

47.

நல்ல தென்றிடினு நம்மை யாளுடைய
      நாய கன்றிறமி நானிலம்
அல்ல தென்றிடினு மல்ல தொன்றுகன
      வதினு மேவலர்க டிறமினோ.

(30)
   

48.

அலைவி லாதபொரு ளதனொ டொன்றியது
      இதுவெ னாமையறி யாதறிந்
துலைவி லாதவமு துண்டு பண்டைநினை
      வொருவு வீர்கடைக டிறமினோ.

(31)
 

வேறு

 

49.

கருகும்படி நயனங்கொடு களவின்னும துயிரைப்
பருகும்பொழு துருகும்படி படர்வீர்கடை திறமின்.

(32)
 

வேறு

 

50.

மருவு மநாதிப் பிறந்தையை
      வஞ்சித்து நீங்கி மனாதியும்
பொருவு மிலானொடு கூடியே
      பொலிவுறு வீர்கடை திறமினோ.

(33)
   

51.

ஆவது மழிவது மடைவதும்
      அகல்வது மிகல்வது மருள்வதும்
போவதும் வருவது மின்றிய
      பொருளை மணந்தவர் திறமினோ.

(34)

45. அத்திர இறை உருவது பரித்து - நிலையற்ற தங்குதலையுடைய உருவத்தைத் தாங்கி.

பி - ம். ‘அத்திறவிறை’ ‘தெரிவினி லுற்றவர்’

50. அநாதிப் பிறந்தை - அநாதிகாலமாக வரும் பிறவி. மனாதியும் பொருவும் இலான் - மனம் முதலிய காரணங்களும் ஒப்பும் இல்லாதவன்.