பக்கம் எண் :

10 பாசவதைப் பரணி

52.

ஈருட லோருட லாகவே
      இறுக வணைத்தினி தின்புறும்
காருட லோதி மடந்தையீர்
      கனக நெடுங்கடை திறமினோ.

(35)
 

 

 

53.

கூடு நெடுங்கன வதனிலே
      குற்ற மிலானுட னுற்றிடா
தூடு மனந்தனொ டூடுவீர்
      உமது நெடுங்கடை திறமினோ.

(36)
   

54.

ஊரு மலாலுயர் தேயமும்
      உறுகுல மும்முற வின்முறை
யாரு மிலானொடு கூடியே
      இன்புறு வீர்கடை திறமினோ.

(37)
 

வேறு

 

55.

ஊரும் படைத்ததொரு மானிடப் படிவமும்
      ஒன்றியே வாழுநா டன்றியே யுயர்திருப்
பேரும் படைத்தசிவ ஞானதே சிகனருட்
       பெருமைபா டக்கபா டந்திறந் திடுமினோ.

(38)
 

வேறு

 

56.

செறியு மலவிருள் பறிய வருசிவ
      ஞான தேசிக தினகரன்
அறியு மறிவுற வருளு நெறியினை
      அறைய வணிகடை திறமினோ.

(39)
 

வேறு

 

57.

தேசம் பரித்த சிவஞான தேசி கன்பார் வந்தெமது
பாசம் பறித்த திறம்பாடப் பைம்பொற் கபாடந் திறமினோ.

(40)
   

58.

தெரிக்குஞ் சீர்த்திச் சிவஞான தேசி கன்றாள் சிரத்தணிந்து
பரிக்கும் பாச வதைப்பரணி பாடக் கபாடந் திறமினோ.

(41)

52. கார் உடல் ஓதி - கரிய ஆணவத்தைப் பகைக்கும் மெய்ஞ்ஞானம் ; மேகத்தைப் பகைக்கும் கூந்தல். “அழுந்த வாகம திரண்டு மொன்றுற வழிவி லானொடு தழுவி” (அஞ்ஞவதைப்) ; “ஈருருவை யோருருவா யிசைக் கின்ற தெனதம்பே” (372) என்பர் பின்.

53. மனம் தன்னொடு - மனத்தோடு.

55. வாழு நாடன்றியே உயர் - வாழும் நாட்டில் மட்டுமன்றி எங்கும் ஓங்குகின்ற.

57. தேசம் - ஒளி.

பி - ம். ‘நேசம் பரித்த சிவஞான நிகழ்தேசிகன்’

58. பரிக்கும் - தாங்கிய.