3. காடு பாடியது 59. | நெடிய கானமு நிழலென வழல்வது நெறியு ளத்து நினையினு மெரிவது கொடிய கானமொன் றுளதத னிலையினிக் கூறு கின்றது தேறுக தேறுக. | (1) | | வேறு | | 60. | அடுவிலங் கல்லவ ரறிஞரே யாதலால் அவரலா தவர்விலங் காதலா லவைகள்வாழ் கடுநிலஞ் சுடுமழற் கதுவவெந் தெரிதவழ் கதிமயங் கியநெடுங் கவலைகூர் கானமே. | (2) | | | | 61. | அன்னவவ் வடவியின் கொடுமையை யளவிடா யாவரே கூறுவார் தேவரே யாயினும் துன்னவவ் வடவிதா னெளியதோ வடவையச் சூடுபட் டல்லவோ தொடுகடற் படிவதே. | (3) | | வேறு | | 62. | தணிகிலா வருகர்தம் பிண்டியுந் தேரர்தம் தழைகுலா மரசுமைந் தருவுமே பொருவுமே அணுகிலா நீளிடை யடையவுஞ் சோலையாய் அடையவே யடையவே யழலுமவ் வடவியே. | (4) |
59. கானம் - பாலைநிலம். நினையினும் எரிவது : “நினையின்வே முள்ளமும்” கம்ப. தாடகைவதைப். பி - ம். ‘நெறிநிறைந்து’ 60. அவைகளென்றது கல்லாதவர்களாகிய விலங்குகளை ; “விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல், கற்றாரோ டேனை யவர்” என்ற குறள் இங்கே அறிதற்குரியது. கதி - தேவகதி முதலியன, வழி. கானம் கடுநில மென முடிக்க. 62. பிண்டி - அசோகு. தேரர் - புத்தர். அடையவும் - முற்றவும். “அணிகொ ளும்பர் தருவுநே ரருகர் பிண்டி மரனுநேர், கணிக பங்க ரரசு நேர் கடிய கான வனலிலே” (அஞ்ஞவதைப். ) ; “தரையினின்ற வகையெனும் பர் தருவுமில்லை சுகதர்தம், அரசுமில்லை யுரைசெயந்த வனலிலெங்கு மழியுமே”, “அழியுமிந்த வனலினெந்த வுலகுமென்ற வருகர்தம், மொழியு மந்த வருகர்பிண்டி மரமுமில்லை முடிவிலே” மோகவதைப். பி - ம். ‘இவ்வடவியே’ |