63. | கனவினு மருளிலா நொதுமலா ரருளுழிக் காணினும் வேலியாய்க் கடிவன முடிவன வினவினுங் கடியசொல் வெம்பணை வீசியே வெகுளிமுட் சொரிகரு வேல்பல மிடையுமே. | (5) | | | | 64. | வன்கலா வதுகடுங் கயவர்தம் மனமதே மரமுமற் றவர்கணே வளரும்வல் லழலவர் நன்கலா வுரைகளே சீறுசூ றாவளி நன்றிலா வவர்புரி நயமில்புன் றொழில்களே. | (6) | | வேறு | | 65. | ஒருக்காலுங் கரையாத வுளமல்லாற் றிரைபொருநீர்ப் பெருக்காலுங் கரைகின்ற பெருங்கல்லோ கருங்கல்லே. | (7) | | | | 66. | சலங்கிளருங் கொடுங்கயவர் தறுகண்ணே யவையன்றி நலங்கிளரும் படிக்குதவு நன்மரமோ புன்மரமே. | (8) | | | | 67. | முருக்குகனன் மூர்க்கர்கொடு மொழியேமற் றுடலினைய உருக்குகன லதுபோல வுயிரினையுஞ் சுடவற்றோ. | (9) | | | | 68. | சுழல்சூறை வளிநீசர் தொழிலேமற் றோரமயத் துழல்சூறை வளியதுபோ லுலகுலையச் செயவற்றோ. | (10) | | வேறு | | 69. | நன்கா டதனைச் சுடுகா டெனவே நவில்வீ ரறிவின் னடைகூர் பிணவெம | |
63. நொதுமலார் - அயலார். வேலி - முள்வேலி. பணை - கிளை. கருவேல் - ஒரு மரம் ; “வாளொத்த முட்சரித்து வறிதே காய்க்கும் வன்பாகுங் கருவேலை வளர்க்குங் கானம்” அஞ்ஞவதைப். 64. நன்கு அல்லா உரைகள் ; பாசவதைப். 66, 68 ; “மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்” (முத்தொள்ளாயிரம்) ; “கல்லுங் கயவோர் மனமேயவர்தங் கண்ணே மரமும் மவர்தண் மையறச், சொல்லும் முரையே சுடுதீ யிடர்சேர் சூறா வளிமற் றவர்தந் தொழிலே” (அஞ்ஞவதைப். ) ; “நெஞ்சங்கல்லாங், கண்ணிணையு மரமாந்தீ வினையி னேற்கே” திருவாசகம். 66. சலம் - வஞ்சனை. 67. இனைய - வருந்த. அது போல - அந்தக் கொடுமொழிபோல ; “உயிரைச் சுடவல் லதுவெவ் வழலோ ஓரா விவர்தம் முரையன் றியுமே” அஞ்ஞவதைப். 68. சூறைவளி தொழில் : பாசவதைப். 64. வற்றோ - வன்மையை யுடையதோ. 69. புகல்வீர் - சொல்வீராக. “செத்தபிண மிடுகாடு சுடுகா டென்று செப்புவர்க ளறியாதார் சிலர்தன் னெஞ்சத், தொத்ததுதா னுணராதுண் |