பக்கம் எண் :

3. காடு பாடியது 13

   
 

புன்கா டதனைச் சுடுகா டெனவே
      புதல்வீர் புநிதர் புகுதா மையினே.

(11)
   

70.

அறியுந் நெறியா லறியா வறநூல்
      அறியும் மறிவோ ரறிவா னறையின்
அறியுந் நெறியா லறியா நரர்வாழ்
      அவணே சுடுகா டழலும் மவையே.

(12)
   

71.

பொய்ந்நீ ரதெனத் தெளியா தணுகிப்
      புணரா சையெனும் பொறிமா னுகள
மெய்ந்நீ ரதெனச் செலும்வாழ் வெனுமவ்
      வெண்டே ரடவி வெளியெங் கணுமே.

(13)
 

வேறு

 

72.

கவர்த்த நெறியின கரக்கும் விடரின
      கறுத்த புறவின மிறுத்தவே
உவர்த்த பயனின பொடித்த கிளையின
      உருத்த மறநிலை பெருத்தவே.

(14)
 

வேறு

 

73.

ஓடியோடி வீடுதோறு முண்ணவுண்ண வெண்ணியே
நாடிநாடி வாடுகின்ற ஞமலிகோடி கோடியே.

(15)
   

74.

ஒடுங்கவே படித்தநூ லுலம்பியே விதண்டையால்
நடுங்கவே குரைத்துநின்ற ஞமலிகோடி கோடியே.

(16)

டுடுத்து வாழு முயிரோடும் பிணம்பயில்கா டொழிய விட்டே” அஞ்ஞவதைப்.

பி - ம். ‘பிணம்வேம்’ ‘புகலீர்’

70. அவணே - அவ்விடமே. அவை அழலும்.

பி - ம். ‘அறியாதனவாழ்’

71. “பேராசை மான்செல்லச் செல்லப் போகும் பேய்த்தேரே யெம் மருங்கும் பெருகுங் கானம்” அஞ்ஞவதைப்.

72. விடர் - வெடிப்பு. விட புருஷர்கள். புறவினம் - புறாக் கூட்டங்கள், புறம்பான இனம். மறம் - வேடச்சாதி, பாவம் ; சிலேடை. பொடித்த - உண்டான.

73. ஞமலி - நாய் ; “தருவர் தருவதில ரெனநினையு மனமொடே தமது தலைமைகெட வவரவர்கள் கடையிலே, ஒருவர் தருமுணவு கருதியுழல் பவையில்வே றுழலு ஞமலிகளு முளவுமல வுணரிலே” அஞ்ஞவதைப்.

74. உலம்பி - முழுங்கி. விதண்டை - ஒருவகை வாதம்.