பக்கம் எண் :

14 பாசவதைப் பரணி

75.

செறிந்தவூ ழெனாதுசீறு சிறியரே சுணங்கன்மற்
றெறிந்தகல்லை விட்டெறிந்த விளையரைச் சினப்பதே.

(17)
 

வேறு

 

76.

வெஃகு கின்றவுயி ரென்ன முன்னணுகி
      மெல்ல மெல்லவதை விட்டுவிட்
டஃகு கின்றதொடர் பற்றி றும்பலர்
      அரங்க மல்கிய சுரங்களே.

(18)
 

வேறு

 

77.

செறிவற் றவர்தஞ் செறிவைச் சினவிச்
      சிறுமைத் தொடர்பைத் தினமுற் றருளும்
அறிவற் றவர்தந் திருமற் றதுவேம்
      அழலுற் றணைய நிழலற் றதுவே.

(19)
 

வேறு

 

78.

முழுதி யற்றுவா ரனைய ராயநன்
      முனிவர் பக்கலு முரண்மி குத்துவெம்
பழுதி யற்றுவா ரிசைக ளேநெடும்
      பார்ப றிந்துநீள் வேர்ப றிந்தவே.

(20)
 

வேறு

 

79.

எரியு மெரிபெயினு மிகலி யுடன்முழுதும்
      இரிய வரிபொழுது மிசையவே
அரியு மரியுமெனு மபய முடையவரும்
      அழல வழல்வதுமவ் வடவியே.

(21)
 

வேறு

 

80.

பிளவற்ற பேரருளைப் பிரியா தொன்றிப்
      பேரானந் தப்பரவை பெரிது மூழ்கும்
அளவற்ற நீராரு மனல வெம்பி
      அழல்வீசுங் காந்தார மதுவே யம்மா.

(22)

75. அரங்க - துன்பப்பட.

பி - ம். ‘அரங்கண் மல்கிய’, ‘பலரங்கண் மல்கிய’

77. செறிவு அற்றவர் - ஏகாந்திகள். செறிவை - சம்பந்தத்தை.

பி - ம். ‘அதுவே யழலுற்ற’ ‘அனைய’

78. இசைகள் - புகழ்கள்.

79. அபயம் - அஞ்சாமை.

80. நீரார் - தன்மையையுடையவர், நீரையுடையவர். காந்தாரம் - காடு.