185. | பொன்மாலை பூமாலை புறக்கணித்துத் தன்னடியார் சொன்மாலை யெப்போதுஞ் சூடுவது திருவுள்ளம். | (15) | | | | 186. | கேசாதி பாதாந்த மணியணிகள் கிளரருளால் ஏசாத ஞாதாதி யொருமூன்று மின்னமுதால். | (16) | | | 187. | பண்ணேழுங் கர்ணாவ தங்கிசமோ பராபரைக்கு மண்ணேழு மணிமுன்கை வால்வளையோ மதித்திலனால். | (17) | | | | 188. | மலையேழுங் கந்துகமோ மணிக்கழங்கோ வம்மனையோ அலையேழு திருநதியு மாரமோ வறிந்திலனால். | (18) | | | | 189. | அண்டபகி ரண்டமெலா மவள்காதிற் குதம்பையதோ கொண்டபடி கோத்தணியுங் கோவையோ குறித்திலனால். | (19) | | | | 190. | பொழிலேழும் விளையாடிப் பூக்கொய்யு மிளங்காவோ எழிலேழு பாதலமு மெரிமணிப்பூண் பெட்டகமோ. | (20) | | | | 191. | புவனங்க ளோமாதி புரிந்தபிடே கிப்பவைக்கும் தவனங்க ளோவன்னை தானடுக்கும் பழங்கலமோ. | (21) | | | | 192. | வேதங்க ளொருநான்கு மெல்லடிமேல் வியன்சிலம்போ நாதங்க ளொருநான்கு நகுகதிர்வண் சதங்கைகளோ. | (22) | | | | 193. | மிருதிபுரா ணஞ்சடங்கம் வீறுமெண்ணெண் கலையாதி ஒருதிசிலம் பொடுசதங்கைக் கொள்ளரியோ வுணர்ந்திலனால். | (23) |
185. “சாத்தும்பூ மாலையினுந் தமையுணர்ந்த மெய்யடியார், ஏத் தும்பா மாலையிலே யெப்போதுந் திருவுளமே” அஞ்ஞவதைப். 186. ஞாதாதி மூன்று - ஞாதா, ஞானம், ஞேயம் ; அறிபவன், அறிவு, அறியப்படுவது. “பாதாதி கேசாந்த முவந்தணியும் பணியருளே, ஞாதாதி யாமூன்று முவந்தயிலு நல்லமுதே” அஞ்ஞவதைப். 187. கர்ணாவதங்கிசம் - செவிப்பூ ; “பண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ” குலோத். உலா. 188. கந்துகம் - பந்து. மலை கந்துகம் : “காவன் மலையேழுங் கந்துகமோ” (குலோத். உலா. ) நதி ஆரம் : “ஆர்க்கு நதியேழு மாரமோ” குலோத். உலா. 191. ஓமாதி - ஹோமம் முதலியன. தவனங்கள் - ஸ்நபனகலசங்கள். பி - ம். ‘புவனங்களேயாதி’ 192. வேதம் சிலம்பு : “அடிச் சூட்டு நூபுரமோ வாரணங்க ளனைத்துமே” தக்கயாகப்பரணி, 119. 193. மிருதி - வேதம். சடங்கம் - சாஸ்திரங்கள் ஆறு. ஒருதி - ஒருத்தி ; தொகுத்தல். அரி - சிலம்பின் உள்ளிடும் பரல். |