பக்கம் எண் :

6. தேவியைப் பாடியது 35

 

பரிசனம்

 
201.

தெரிசனத்தின் முறைமையருள் தேவிபணி விடைபூண்ட
பரிசனத்தின் பரிசதனைப் பகுத்தினிநாம் பகருதுமே.

(31)
   

202.

மாலாய போதமற வடிவோவ யோகமுற
மேலாய யோகினவர் வீரிபயி ரவர்களே.

(32)
  

203.

செறியுமா றிந்திரிய முதலாய பொருளுண்மை
அறியுமா றறிபவர்க ளமலையோ கினிகளே.

(33)
 

வேறு

 

204.

உடலெலாம் விழியதா யுறுமவர்க் கருள் செய்வார்
      உதயமத் தமனமற் றொளிர்கதிர்க் குவமையார்
கடலுலா வியதிரைப் பிறவிகெட் டிலகுவார்
      காளிமா காளிகங் காளியோ கினிகளே.

(34)
   

205.

நிலையிலா தனவெலா நிலையெனக் கருதிடார்
      நிலையினைக் கருதிநித் திரையறத் துயில்செய்வார்
கலையெலா மடையினுங் கந்தைகோ வணவரே
      காளிமா காளிகங் காளியோ கினிகளே.

(35)
   

206.

ஒட்டுவிட் டுணர்வுவிட் டுரையும்விட் டுலகுவிட்
      டூசலா டுவதுவிட் டுறுபெரும் பிறவியின்
கட்டுவிட் டருணிலைக் கட்டுநிற் பவர்களே
      காளிமா காளிகங் காளியோ கினிகளே.

(36)
   

207.

தகையுமா யோததிக் கரைகடந் தணையுமே
      சகலவாழ் வையுமிந்த்ர சாலமென் றுணருமே
பகையுமார் வமுமிழந் துவகைபெற் றுயருமே
      பரைபுரா தனிமனோன் மணிபதா கினிகளே.

(37)

201. பணிவிடை - குற்றேவல். பரிசனம் - பரிவாரம்.

202. “புரம யோகமுறு பேதமறு போத முடனே, பரம யோகமுறு வாரிறைவி பயிரவர்களே” அஞ்ஞவதைப்.

பி - ம். ‘யோகினிவர்’

203. “புணரு மைத்ரிமுத லானபொரு ளுள்ளபரிசே, உணரு மார்க்கம் வரு மாதவர்கள் யோகினிகளே” அஞ்ஞவதைப்.

204. “அவர்களா கமுமெலாம் விழியதா மொழிவரே, எழுதன்மா றுதலிலா விரவியா முருவரே” அஞ்ஞவதைப்.

205. கலை......... கோவணவரே :  “கலைபொ றாமலொரு கோவணவ ராய்விடுவரே” அஞ்ஞவதைப்.

206. ஒட்டு - பற்று.

207. தகையும் - துன்பஞ்செய்யும். மாயோததி - மாயையாகிய கடல்.