பக்கம் எண் :

38 பாசவதைப் பரணி

218.

வெந்தி றற்கொடிய சூலமொடு பாசம்விசிறா
      மேதி யூர்திமிசை வெங்கதை சுழற்றிவெகுளா
வந்த வந்தக னடுங்கிவிழ மோதிவெருவேல்
      மாம றைச்சிறுவ வென்றருள் பொழிந்தவளமும்.

(48)
   

219.

வேத னாரணனொ டாரணமு மின்னமுணரா
      மிக்க பாதயுக ளந்தரணி தோயவிரவிற்
றூத னாகியிரு காலொரு மடந்தையிசையத்
      தொண்ட ரேவல்தலை கொண்டருள் சுரந்தபரிசும்.

(49)
  

220.

முன்பு பின்பினொடி லாததொரு மூலவொளிபால்
      முற்றி யுற்றழிவி லாதொரு திறத்தினுருகும்
அன்பு கொண்டக நெகிழ்ந்தணி வளர்க்கநினையும்
      அம்ம வைக்கருள் தருங்குழவி யானபரிசும்.

(50)
   

221.

மேன்மை யுற்றசிவ ஞானதே சிகனிவனெனும்
      மிக்க நாமமொடு மேதினி தழைக்குமுறையால்
மானி டப்புதிய கஞ்சுக மணிந்துதமிழ்தேர்
      மயிலை மால்வரை வளம்பெருக வந்தபரிசும்.

(51)
 

வேறு

 

222.

ஒருமூர்த்த மெனவுணராப் பரப்பிரமந் தனினின்றும்
      உபதே சிப்பக்
குருமூர்த்த மெனவெய்தி மான்மழுவுங் கரந்ததிருக்
      கோலம் போற்றி.

(52)

218. மேதியூர்தி - எருமைக்கடா வாகனம். அந்தகன் - யமன். மறைச் சிறுவன் - மார்க்கண்டேயர்.

219. பாதயுகளம் - இரண்டு தாள்கள். ஒருமடந்தை - பரவையார். தொண்டர் - சுந்தரமூர்த்தி நாயனார்.

220. அம்மவை - சிவஞான பாலைய தேசிகரை வளர்த்த தாய் ;  “பெருகுமம் மவைவளர்க் குங்குழவி செங்கீரை யாடியருளே.” சிவஞான. பிள்ளைத்.

221. கஞ்சுகம் - சட்டை. மயிலைமால்வரை - மயூராசலம் ;  இப்பொழுது மயிலம் என்று வழங்கும் ஸ்தலம்.