283. | ஒன்றி நல்ல வுரையென் றுரைப்பவும் ஊம னாவ னுடம்பெங்கும் வாயதாய் அன்றி வேறுங் கடன்கொடு வீணிருந் தளப்ப ளப்பனோ ராயிர கோடியே. | (16) | | | | 284. | ஏற்ற வர்க்கொன் றிடுகின்ற காலையின் இரண்டு கையு மிழந்தவ னாவனே மாற்ற லர்க்கு நிதியிடு காலையின் வாண னாண்மலி கையின னாவனே. | (17) | | | 285. | ஈசர் வாழ்பதி யேத்தருந் தீர்த்தங்கள் ஏகு தற்கிரு கான்முட மாவனே நீசர் வாழ்பதி நெட்டிடை நீந்தியே நெடிது செல்ல நெடுங்கால னாவனே. | (18) | | | | 286. | அல்ல லாய வறுமையு மாங்கதை அகற்ற வெண்ணி யலைந்தலைந் தேதினம் செல்லு மாய முயற்சி யிடும்பையும் சிறந்த வொன்றாத் தெரிந்து திரிவனே. | (19) | | | | 287. | உந்து தேரி னுருளுங்கூத் தாட்டவை உறுங்கு ழாத்தொடு சாயையு மோடுநீர் வந்து தோன்றுங் குமிழியும் போற்கெடும் மாய வாழ்வை நிலையாய் மதிப்பனே. | (20) |
283. அளப்பன் - பலமுறை சொல்வான் ; “அளந்தென் றலையி லெழுத்தெனுங் கூழை யரும்பொருளே” சங்கர நயினார் கோயிலந்தாதி, 9. 284. நாண் - நாணுகின்ற. “எவ்வத் தேற்பவர்க் கீயக்கை யில்லனே” அஞ்ஞவதைப் 285. நெட்டிடை - நீண்ட இடம். 287. தேரினுருள் : “சகடக்கால் போல வரும்” (நாலடி. ) கூத்தாட்டவை உறுங்குழாம் : “கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம், போக்கு மதுலிளிந் தற்று” (குறள். ) நீர்க்குமிழி : “நீரிற் குமிழி யிளமை” (நீதிநெறி விளக்கம். ) “சாயை போலுஞ் சகட்டுருள் போலுமா, மாய வாழ்க்கை நிலையாய் மதிக்குமே” அஞ்ஞவதைப். |