பக்கம் எண் :

8. கூளி கூறியது 47

273.

இன்னன்யா னின்னனிவன் யானெனதென் றெண்ணஞ்செய்
துன்னுங்காற் சங்கற்ப வுயர்புரிசை சூழந்துளதால்.

(6)
   

274.

தவாமன்னு ஞானவெரி தன்னாலுந் தெறலாகா
அவாவென்னுந் தூறடர்ந்த வழுக்காற்று மிளையினதால்.

(7)
  

275.

மாறுபுரி வீரர்பலர் மருங்கமைய வறிவில்லா
வேறுவமை போயவிருள் விளக்கிருள மிடைந்துளதால்.

(8)
   

276.

காமனே முதலாய கடுந்தலைவ ருடன்கலந்த
நாமவேற் றானைநிலை நான்முகமும் பரந்துளதால்.

(9)
   

277.

செம்புலவீ ரருமஞ்சச் சினந்தெழுந்து பாய்ந்ததிரும்
ஐம்புலமாந் தறுகண்மை யானையதி னானைகளால்.

(10)
   

278.

ஏறாத நெடுவரையு மேறிநொடி வரைமீளும்
மாறாத பேராசை வாம்பரியின் மறலினதால்.

(11)
   

279.

நினைத்தபொரு ளதனையொரு நிமிடத்தி னடைவிக்கும்
முனைத்தகதி விடயமெனு மூரிநெடுந் தேரினதால்.

(12)
   

280.

முரணிவளை வெய்திடினு மொழியினொரு நொடிவரையிற்
றரணிமுழு துஞ்சுழலுஞ் சக்கரமன் சக்கரமால்.

(13)
 

அஞ்ஞன் இயல்பு

 
 

வேறு

 

281.

அன்ன மாயா புரத்துக் கதிபதி
என்ன வந்த விழுதை யரசனே.

(14)
 

வேறு

 

282.

குற்றந் தன்வயிற் காணப் பிறர்குணம்
      குறித்து நோக்கக் குருடாகித் தன்குணம்
உற்று நோக்கப் பிறர்பழி நோக்குழி
      உடம்பெ லாங்கண் ணுடையவ னாவனே.

(15)

273. “சங்கற்ப மாமென்பர் சலியாத மதிளே” அஞ்ஞவதைப்.

277. செம்புலவீரர் - செம்மையாகிய அறிவையுடைய வீரர்கள் ;  என்றது ஞானியரை ;  போர்க்களத்திலுள்ள வீரர் என்பது ஒரு பொருள். ஐம்புலமாம் யானை :  பாசவதைப், 85.

278. நொடிவரை - நொடிப்பொழுதில்.

279. நிமிடம் :  “அரைநிமிட நேரமட்டில்” (திருப்புகழ்) “கருதுமொரு பொருளையொரு கணமளவி லடையவிகல் கடவுமவன் விடயரதமே” அஞ்ஞவதைப்.

280. சக்கரம் - ஆணை.

281. “இந்திர னாகும் பிறரொருவ ரேதங் காணு மிடத்திலே” அஞ்ஞவதைப்.