பக்கம் எண் :

50 பாசவதைப் பரணி

294.

தான மில்லை தவமில்லை வண்புகழ்
      தானு மில்லை தருமமு மில்லையால்
மான மில்லை மடவார்தங் கற்பிலை
      மற்று மொன்றில்லை மாத்தா னொழுக்கமே.

(27)
   

295.

நடலை வாழ்க்கை நிலையா நயப்புற
      நாட லின்றி நலங்கொள் படிவமும்
முடலை யாக்கைய தாக வியப்புற
      மூக நீதி முடிய மொழியுமால்.

(28)
  

296.

நீதி யற்றமை தன்னை நினைப்புற
      நெடிய மூவுல கத்து நிரல்பட
ஓதி மற்றவர்க் கித்துணை யாயினும்
      உணர்த்த வல்லா ரொருவரு மில்லையால்.

(29)
   

297.

வழுவி நின்று மயங்கி மயங்கிவாய்
      மாறி வைகலு மாறா வரும்பவம்
தழுவி நின்று தரணியு ளோர்படும்
      தாழ்வு தம்பிரான் றானே யறியுமால்.

(30)
 

சிவஞான தேசிகர் அவதரித்தல்

 

298.

பாச வஞ்ஞன் பழிமா சுலகெலாம்
      படர்ந்து மூடும் பரிசு பரானந்தத்
தேசு பெற்றுய ருங்கரு ணாலயன்
      திருவு ளந்தனிற் சென்றேறி விட்டதால்.

(31)
 

வேறு

 

299.

மற்ற வஞ்ஞன் மடியத்தன் பேரருள்
முற்று மோர்வடி வாகி முதல்வனே.

(32)

294. வண் புகழ் - கொடுத்தலால் உண்டாகும் புகழ். மா - விலங்கு. “அற்பு மில்லை யருந்தவ மாதரார், கற்பு மில்லை கழிந்தா னொழுக்கமே” அஞ்ஞவதைப்.

295. நடலை வாழ்க்கை :  “நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்” (திருநா. தே. ) மூக நீதி :  “மூகநீதி முடிய மொழிவதே” அஞ்ஞவதைப்.

296. “முறையை யற்றமை மூவுல கத்தினும், இறைய வர்க்கறி விப்பாரு மில்லையே” அஞ்ஞவதைப்.

பி - ம். ‘நிரம்பட’

299. “தன்பே ரருண்முற்றுந் தானோர் வடிவாயே” அஞ்ஞவதைப்.