பக்கம் எண் :

8. கூளி கூறியது 51

300.

கயிலை மால்வரை நீங்கிக் கனிவினால்
மயிலை மால்வரை வந்துதித் தோங்கியே.

(33)
   

301.

ஆன நாம மவனியு ளோர்சிவ
ஞான தேசிக னென்றேத்த நண்ணியே.

(34)
 

சிவஞான தேசிகர் பிள்ளைப்பருவ விளையாட்டு

302.

அலையெ டுத்த வுலகி னருந்தவம்
தலையெ டுப்பத் தலையெடுத் துந்தியே.

(35)
   

303.

ஒழுக்க முற்று முலகந் தவழ்ந்திட
விழுப்ப முற்றுத் தவழ்ந்து விளங்கியே.

(36)
   

304.

வேத நன்னடை மேம்பட மேம்படு
போத நன்னடை போற்றி நடந்தரோ.

(37)
   

305.

விச்சை யல்லது வேறொன்றின் மேலெமக்
கிச்சை யில்லென் றிருகா தலைத்தரோ.

(38)
   

306.

மூட நீதி முழங்குஞ் சமையப்புள்
ஓட வம்போ ருகக்கரங் கொட்டியே.

(39)
 

ஞானக்கோலம் கொள்ளல்

 

307.

தலைம யங்கிய தத்துவ ஞானநூல்
நிலைபெ றும்படி யாய்ந்து நிலவியே.

(40)
   

308.

பிறவி நீள்பகை பேர்ப்பா ரிவரென
அறையு ஞான வருட்கழல் வீக்கியே.

(41)
   

309.

அற்ற நீக்கி யபிமான மென்பவை
செற்ற ஞானத் திருவுடை சாத்தியே.

(42)
   

310.

இதர நூனெறி யேகாமெய்ஞ் ஞானமாம்
உதர பந்த முவப்பொடு சேர்த்தியே.

(43)
   

311.

கோதி னஞ்ஞ னுயிரைக் குடிப்பதோர்
தீதின் ஞான வுடைவாள் செருகியே.

(44)

302. அலை - அல்லை ;  அஞ்ஞானத்தை.

307. நிலவி - நின்று.

308. “பிறவிப் பகைவெல்வார் பிறிதற் றொருதானா, அறிவுற் றவ ரென்றே யறையுங் கழலிட்டே” அஞ்ஞவதைப்.

311. ஞானவாள்  :  “என்னவிரோத ஞானச் சுடர் வடிவாள்” கந்தரலங்காரம்.

பி - ம். ‘கோத வஞ்ஞன்’