பக்கம் எண் :

52 பாசவதைப் பரணி

312.

கமல யோனி கருத்துங் கடந்ததோர்
விமல ஞான வியன்முடி சூடியே.

(45)
   

313.

ஈன வஞ்ஞ னெனும்பாசன் பட்டிட
ஞான பட்டந்த னன்னுதற் கட்டியே.

(46)
  

314.

ஊன வஞ்ஞ னுறும்பழி கேட்கிலா
ஞான குண்டல நன்கா தணிந்தரோ.

(47)
   

315.

வளரு மஞ்ஞன் மடியத் திருப்புயம்
கிளரு ஞானவண் கேயூரந் தாங்கியே.

(48)
   

316.

தூய ஞான சுகானந்த முத்திரை
ஆய வாழி யணிவிரல் சேர்த்தியே.

(49)
   

317.

எங்கு மாமண மேறமெய்ஞ் ஞானவண்
குங்கு மாதி குளிர்சாந்து பூசியே.

(50)
   

318.

குணம றாது குலவுமெய்ஞ் ஞானமாம்
மணம றாத மலர்மாலை சாத்தியே.

(51)
   

319.

கூரு மஞ்ஞன் குலையமெய்ஞ் ஞானமாம்
வீர சங்கிலி பூண்டு விரும்பியே.

(52)
   

320.

ஆசி லாத வருள்பொழி ஞானமாம்
மாசி வார மணிவடந் தாங்கியே.

(53)
   

321.

சங்க மற்ற சதானந்த வாரிதிச்
சங்க மெங்குந் தழங்கித் தழையவே.

(54)
   

322.

பகரி னெங்கும் பரந்தொடுங் காததாம்
நிகரின் ஞானக் கவிகை நிழற்றவே.

(55)
   

323.

முதிரு ஞானமுந் நீர்த்திரை யாகிய
எதிரில் வெண்சா மரைக ளிரட்டவே.

(56)
   

324.

இணக்க மற்ற வியன்ஞான மாகிய
பிணக்க மற்ற பதாகை பிறங்கவே.

(57)
   

325.

தூய ஞான சுதர்சனச் சக்கிரம்
மாய வஞ்ஞன் மறுகச் சுழலவே.

(58)

312. கமலயோனி - பிரமன்.

313. கேயூரம் - வாகுவலயம்.

316. ஆழி - மோதிரம்.

324. பதாகை - பெருங் கொடி.