| படைகள் | | 326. | கடக்க லாதசங் கற்பங் கடந்ததென் படைக்கை சான்ற பதாகினி சூழவே. | (59) | | | | 327. | தடையொன் றின்றிச் சலியா வியன்பொறை நடையொன் றின்மணி நற்றேர் மலியவே. | (60) | | | 328. | தேசு மேவு செயறீர் குரகதம் மாசி லாது மருங்குற மன்னவே. | (61) | | | | 329. | அவாவின் மூரி யசல மெனுமர சுவாவின் மாட்சி யுலகம் வியப்பவே. | (62) | | சிவஞான தேசிகர் சுகாசனத் தேறல் | | 330. | ஏறு புள்ளன மென்பவை யாதியா ஏறு மூர்திக ளெல்லா மிரங்கவே. | (63) | | | | 331. | வெறுத்த செய்தி விரகில்வெங் காலனைக் கறுத்த பாத கமலஞ் சிவப்பவே. | (64) | | | | 332. | உய்தி யெய்த வுலக முழுவதும் செய்த புண்ணிய மெல்லாந் தெரியவே. | (65) | | | | 333. | அரணி லஞ்ஞ னவனையொன் றாவுன்னித் தரணி தோயத்தன் றாமரைத் தாள்களே. | (66) | | | | 334. | இடரு ழந்தங் கிமையவர் தேடவிங் கடர்செய் தெங்கு மடியவர் போற்றவே. | (67) | | | | 335. | வேதங் காணரு மேதக்க வன்செயல் ஓது மாறெவ னென்றுல கோதவே. | (68) | | | | 336. | எந்தை யெம்பிரா னெங்குரு நாயகன் வந்து பூமிசை மானிடர் வாழவே. | (69) | | | | 337. | இன்ன வண்ண மிகன்ஞான கேசரி துன்னு யோக சுகாசனத் தேறியே. | (70) |
326. என் - என்று சொல்லப்படுகின்ற. பதாகினி - கொடிப் படை. 328. தேசுமேவு குரகதம், செயல்தீர் குரகதம். பி - ம். ‘செயிர்தீர் குரகதம்’ 329. பி - ம். ‘உலக மதிப்பவே’ 333. “உம்ப ரானவர்க் கரிய தாணுவிவ் வுணர்வி லானையொன் றாக வுன்னியே, தம்பி ரானருட் கருணை யாலையன் தானும் வந்தனன் றரணி தன்னிலே” அஞ்ஞவதைப். |