| அஞ்ஞன் படைகள் ஞானம் பெறுதல் | | 628. | உழந்தமன்ம தாதிசேனை யொன்றுமில்ல வாகியே இழந்துஞான ரூபமாகி யேகமா யிலங்குமே. | (361) | | வேறு | | 629. | பிறப்பி றப்பொடு பிணங்கினரே பிறப்பி றப்பொடு பிணங்கினரே. | (362) | | | 630. | வரவொடு போக்கிடை மாண்டனரே வரவொடு போக்கிடை மாண்டனரே. | (363) | | | | 631. | ஒளிக்கு முளத்தவ ராயினரே ஒளிக்கு முளத்தவ ராயினரே. | (364) | | | | 632. | அருவினை யீட்ட மகன்றனரே அருவினை யீட்ட மகன்றனரே. | (365) | | | | 633. | உணர்வுண ராமை யொழிந்தனரே உணர்வுண ராமை யொழிந்தனரே. | (366) | | | | 634. | ஒன்றறி யாமை யுதித்தனரே ஒன்றறி யாமை யுதித்தனரே. | (367) | | | | 635. | நினைப்பு மறப்பொடு நின்றவரே நினைப்பு மறப்பொடு நின்றவரே. | (368) | | | | 636. | பொறிவழி யேமனம் போனவரே பொறிவழி யேமனம் போனவரே. | (369) | | | | 637. | வெய்ய பவப்பகை வென்றவரே வெய்ய பவப்பகை வென்றவரே. | (370) |
629. பிறப்பினாலும் இறப்பினாலும் துன்புற்றவர், பிறப்போடும் இறப்போடும் பகைத்தனர்; பிறப்பிறப் பிலராயினா ரென்றபடி. 630. மாண்டனர் - மாட்சியையுற்றவர், இறந்தனர். 631. தம்மை ஒளித்த உள்ளத்தையுடையவர் தானே ஒளிந்த உள்ளத்தரானார்; மனம் அற்ற தென்றபடி. “கரக்கு முளத்தவ ராயினரே, கரக்கு முளத்தவ ராயினரே” அஞ்ஞ. 632. அகன்றனர் - அகற்சியையுடையராயினவர், நீங்கினார். 635. நினைப்பு மறப்பு என்பவற்றோடு இருந்தவர் நினைப்பையே மறந்தனர். 636. பொறிகளின் வழியே மனம் போனவர்கள், பொறிகளும் அவற்றோடு மனமும் ஒருங்கே போகப் பெற்றனர். 637. வென்றவர் - வெல்லப்பட்டவர், வெற்றிபெற்றவர். |