| வேறு | | 638. | கல்லிய தும்மக மாயையே காதரந் தீர்த்தருள் காதலார் சொல்லிய தும்மொரு வார்த்தையே தொல்லுல கும்மொரு வார்த்தையே. | (371) | | | | 639. | உய்த்தரு ளுந்தினைப் போதிலே உணர்வுரு வாகநம் முச்சிமேல் வைத்தரு ளும்மிரு போதுமே வாழத்துவ தும்மிரு போதுமே. | (372) | | ஞானவினோதன் படை மீளுதல் | | | வேறு | | 640. | உளவி லானுயிர்க் குறுதி செய்தபின் உணர்வி னாதனை யுற்று வாழ்தரும் அளவி லாவரும் படையை மீள்கென அரிய சேனையுந் திரிய மீளுமே. | (373) | | கண்டோர் ஞானவினோதனைப் புகழ்தல் | | 641. | அங்க மாதிசேர் வஞ்ச மாபுரத் தாண டங்கலு மடுதல் கண்டுளோர் எங்கள் தம்பிரா னிசைகள் பாடிநின் றினைய வண்ணமங் கேத்தி நிற்பரே. | (374) | | வேறு | 642. | மனக்கமலங் கறுப்பதுவும் புனற்கமலஞ் சிவப்பதுநீ வையத் தெய்தி எனக்கமலம் புரிந்தருளு மிருசரணங் காட்டாம லிருப்பி னன்றோ. | (375) |
638. காதரம் அச்சம். வார்த்தை - உபதேசம், புகழ். “அழிந்தற மாயை யிருட்டெலா மறிவுரு வாகநம் மண்ணலார், மொழிந்தது மிங்கொரு வார்த்தையே மூவுல கும்மொரு வார்த்தையே” அஞ்ஞ. 640. உளவிலான் - அன்பர்களுடைய உள்ளமாகிய இல்லத்தை உடையவன். 642. “அடியே முள்ளங் கறுப்பதுநல் லம்போ ருகங்கள் சிவப் பதுமிப், படியே வந்த பரனேநின் பாதங் காட்டாப் பண்டன்றோ” அஞ்ஞ. |