தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 171 |
சொன்ன வாயுளே யொருவன் புட்குரன் முன்னங் கூறினான் முழுது ணர்வினான். ” (சிந்தாமணி, 415) | | “. . . . . . . . . . . . . . | | நல்வேய்தெரிகானவன் புள்வாய்ப்புச் சொன்னகணி | | (வேட்டுவ வரி - சிலப்பதிகாரம்) | | வேற்றூர்க் கட்சியுட்காரி கடியகுரலிசைத்துக் காட்டும் | | போலும், . . . . . . மறவன் கைவில் ஏந்திப்புள்ளும் | | வழிப்படர . . . . புல்லார் நிரைகருதிப் போகும். ” | | (வேட்டுவ வரி - சிலப்பதிகாரம்) | |
புடைகெடப் போகிய செலவு = பக்கத்து இடமில்லையாம்படி படை பரந்துசெல்லுதல்; “வெவ்வாள் மறவர் மிலைச்சிய வெட்சியர் செவ்வானம் செல்வதுபோற் செல்கின்றார் - எவ்வாயும் ஆர்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ போர்க்குந் துடியொடு புக்கு. ” (பெரும்பொருள் விளக்கம்: புறத்திரட்டு, 1236) புடைகெட ஒற்றின் ஆகிய வேயே = வேற்றுப்புலத்து இருதிறத்தும் ஒற்றறிய இடமில்லையாம்படி ஒற்றரால் அறிந்த உளவு: “ஒருவ ரொருவ ருணராமற் சென்றாங் கிருவரு மொப்ப விசைந்தார் - வெருவர வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு. ” (பழம்பாட்டு) தம் மொற்றர் இனி யறிய இடமில்லாதாயிற்று, அவர் முற்றும் ஒற்றி முடிந்ததனால் பிறர் ஒற்ற இடமில்லையாயிற்று, அவரறியாவாறு தம் மொற்றர் மறைவில் ஒற்றிய திறப்பாட்டினால். வேய்ப்புற முற்றின் ஆகிய புறத்திறை = உளவறிந்த சூழலை வளைத்து அற்றநோக்கி அடங்கியிருத்தல். “கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும் பரந்துசெல் மள்ளர் பதிந்தார் - அரந்தை |