பக்கம் எண் :

172நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி
எரிந்தவியும் போலுமிவ் வூர். ”

(பதிதல் = அமைதியாகத் தங்குதல். அரந்தை = துன்பம்).

முற்றிய வூர்கொலை = வளைந்துகொண்ட நிரை மீட்கப் பொருவாரைக் கோறல்; (ஊர் மீட்கப் பொரும் ஊரவர்க்கு ஆகு பெயர்).

“சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் தொடைகொண்டு
 நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார் - கொன்றாண்
 டிகலுழந்த வல்வில் லிளையோர்புண் டீரத்
 துகளெழுங்கொல் பல்லான் றொழு. ”

(பழம்பாட்டு)

ஆகோள் = ஆனிரை கொள்ளுதல்;

“. . . . . . . . . . . .
 . . . . . . . . புல்லா ரினநிரை செல்புற னோக்கிக்
 கையிற் சுட்டிப் பையென எண்ணிச்
 சிலையின் மாற்றி யோனே.

(புறம். 257)

ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா
திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த
வல்வின் மறவ ரொடுக்கங் காணாய். ”

(புறம். 259)

எனும் புறப்பாட்டடிகளும் நிரை கொண்டோர் நிலையே கூறும்.

பூசல் மாற்று = நிரைகொண்டு மீள்வோர் மீட்போரால் நேரும் பூசலை விலக்குதல்;

“ஒத்த வயவ ரொருங்கவிய நாண்படரத்
 தத்த மொலியுந் தவிர்ந்தன - வைத்தகன்றார்
 தம்பூசல் மாற்றி நிரைகொள்வான் றாக்கினார்
 வெம்பூசன் மாற்றிய வில். ”

(பழம்பாட்டு)

போர் இன்றி நிரைகொள்வதே நோக்காதலின், போர் என்னாது பூசல் எனப்பட்டது. பூசல் - போரின்முன் நிகழும்