பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை173

ஆர்ப்பு. போராய் வளருமுன் அதனைத் தடுத்து விலக்கல் வெட்சியார் வினையாதலின், பூசல் மாற்றெனப்பட்டது.

நோயின் றுய்த்தல் = பற்றிய நிரை வருந்தாவாறு கொண்டுசெலுத்தல்;

“. . . . . . . . . . . . . . . . . .
 முல்லை வகுந்திற் போகிப் புல்லருந்திக்
 கான்யாற்றுத் தெண்ணீர் பருகிக் காமுறக்
 கன்றுபா லருந்துபு சென்றன மாதோ
 . . . . . . . . கவைஇய நிரையே. ”

(ஆசிரியமாலை - புறத்திரட்டு, 1242)

நுவல்வழித்தோற்றம் = தம்மவர் புகழும்படி நிரை கொண்டார் மீளும் பொலிவு:

“. . . . . . . . . . . . . .
 ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று
 நிரையொடு வரூஉ மென் ஐக்கு
 உழையோர், தன்னினும் பெருஞ்சா யலரே. ”

(புறம் 262, மதுரைப் பேராலவாயார்)

தந்து நிறை = கொண்ட நிரையைத் தமதிடத்துக் கொணர்ந்து நிறுத்தல்:

“கயமலர் உண்கண்ணாய் காணாய் நின்ஐயர்,
 அயலூர் அலர எறிந்தநல் ஆனிரைகள்
 நயனின் மொழியின் நரைமுது தாடி
 எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன. ”

(வேட்டுவ வரி - சிலப்பதிகாரம்)

“குளிறுகுரன் முரசங் கோட்டின் வெரூஉங்
 களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி
 நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான
 மெல்லாம் பெறுக விடம். ”

(பழம்பாட்டு)

பாதீடு = நிரை கொண்டோர் பரிசில் தம்முட் பங்கிடுதல்;

“நேரார் புலத்து நிரையைக் கவர்ந்தெதிர்த்த
 போரார் மறவர் புறங்கண்டு - பாராளும்