பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை289

யணங்குசா லடுக்கம் பொழியுநு
மணங்கமழ் மால்வரை வரைந்தன ரெமரே”

- புறம். 151

இதில், ஈயா விச்சிக்கோவை யிகழ்ந்து ஈயும் கண்டீரக் கோவைப் புகழ்வதறிக. “இரவலர்ப்புரவலை நீயுமல்லை” என வெளிமானைப்பழித்த இளஞ் சித்திரனார் புறப்பாட்டும் (162), “ஒல்லுவதொல்லும்” என்று நன்மாறனைப் பழித்த மூலங்கிழார் புறப்பாட்டும் (196) இவ்வகையின.

பொருள் : (3) அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்தும் = நெருங்கிப் பொருந்திப் புகழும் இயன்மொழி வாழ்த்தென்னும் துறையும்;

குறிப்பு : உள்ளசால் புரைப்பது இயன்மொழி, பிற்காலத்திது மெய்க்கீர்த்தி எனப்பட்டது.

இதற்குச் செய்யுள் :

அ. “ஒன்று நன்குடைய பிறர்குன்றம். என்றும்
 இரண்டு நன்குடைத்தே கொண்பெருங் கானம்;
 நச்சிச் சென்ற விரவலர்ச் சுட்டித்
 தொடுத்துணக் கிடப்பினுங் கிடக்கும், அஃதான்று
 நிறையருந் தானை வேந்தரைத்
 திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலு முடைத்தே”
 - புறம். 156

இன்னும், “குறத்தி மாட்டிய” எனும் கபிலர் புறப்பாட்டும் (108) பாரியை அவரடுத்தூர்ந்தேத்தியதாம்.

ஆ. “இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வாணிகன் ஆஅ யல்லன்;
பிறருஞ் சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்றவன் கைவண் மையே”
 - புறம். 134