பக்கம் எண் :

364நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி

அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவில ராகுதல் நோமென் னெஞ்சே”

(குறுந். 4)

இன்னும்,

“இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள்
 ஆய்மல ருண்கட் பசலை
 காம நோயெனச் செப்பா தீமே”

(அகம். 52)

என்பதுமது.

அச்சத்தி னகறற்குச் செய்யுள்:

“அலர்யாங் கொழிவ தோழி! பெருங்கடற்
 புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும்
 நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர்
 யான்கண் டனனோ விலனோ, பானாள்
 ஓங்கல் வெண்மணற் றாழ்ந்த புன்னைத்
 தாதுசேர் நிகர்மலர் கொய்யும்
 ஆய மெல்லாம் உடன்கண் டன்றே”

(குறுந். 311)

“. . . . . . . . . . . . .
 இனமீன் இருங்கழி நீந்தி நீநின்
 நயனுடை மையின் வருதி, இவடன்
 மடனுடை மையின் உயங்கும், யானது
 கவைமக நஞ்சுண் டாஅங்
 கஞ்சுவல் பெரும!என் நெஞ்சத் தானே”

(குறுந். 324)

என்பதுமது.

“. . . . . . . . . . . . . . .
அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும்
வாரற்க தில்ல தோழி! சாரற்
பிடிக்கை யன்ன பெருங்குரல் ஏனல்
உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே
சிலம்பிற் சிலம்பும் சோலை
இலங்குமலை நாடன் இரவி னானே”

(குறுந். 360)

என வருவதுமது.