7

1. மருதம் ( 1 )
(
) வேட்கைப் பத்து


7, வாழி யாதன் வாழி யவினி
  அறநனி சிறக்க வல்லது கெடுக
  எனவேட் டோளே யாயே யாமே
  உளைப்பூ மருதத்துக் கிளைக்குரு கிருக்கும்
  தண்டுறை யூரன் 1றன்னுார்க்
  கொண்டனன் செல்க வெனவேட் டேமே.

இதுவுமது.

  (ப-ரை,) இவள் நின்னை எதிர்ப்பட்ட அன்றே வரைந்தாயெ
னக்கொண்டு இல்லறத்திற்கு வே..............

  குறிப்பு. அல்லது=அறமல்லது-பாவம். அறம் சிறக்க அல்லது
கெடுக;ங். 9:2; புறநா. 195. உளைப்பூ மருதம் -உள்ளே துய்
உள்ள பூக்களையுடைய மருத மரம்; ?உளைப்பூ மருதின்? (முருகு.
28) கிளைக்குருகு-இனத்துடன் கூடிய நாரை. நீர்த்துறையில் மருத
மரம் கூறப்படுதல் : ஐங், 31: 3, 33 : 2, 74 : 3: குறுந் 50.258; பதிற்.
23 : 18-9; பரி 7 : 83; கலித் 26 : 13; அகநா. 36 : 9-10 புறநா.
243 : 6; சிலப் 14 : 72. அடி, 5-6: ஐங், 10 : 5-6. மதுரையில் வையை
யாற்றில் ஒரு துறை, ‘திருமருத முன்றுறை? என்னும் பெயருடன்
பண்டை நுால்களில் பயின்றும் வழங்கும்.

  (பி-ம்.) 1‘றன்னுார் கொண்டனன்?                         ( 7 )